வெற்றிவலவன் பதிவுகள்

Pages

  • Home
  • கைவல்யம் - வேதாந்தம்
  • உண்மை இராமாயணம்
  • சாமியார்கள் எச்சரிக்கை
  • சோதிட ஆராய்ச்சி
  • சிந்தனை செய்வோம்
  • சமூக நீதி
  • பெரியார் உலகம்
  • உழைப்பவர் உலகு

Thursday, 10 March 2022

ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல்வியா?


'தினமலருக்கு'ப் பதிலடி!
  November 01, 2021 • Viduthalai

ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல்வியா?

கவிஞர் கலி. பூங்குன்றன்

தந்தை பெரியார், பெரியாருக்குப்பின் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிடர் கழகம் - இவர்களின்மீது புழுதிவாரி இறைப்பது - பிம்பத்தை உடைப்பது எனும் ஒரு செயலில் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு இருப்பதாகவே தெரிகிறது!

தினமலர், தினமணி, துக்ளக்கோடு, தமிழ் இந்துவும் ஜோடி சேர்ந்திருக்கிறது போலும்!

வரட்டும் - ஒரு வகையில் நன்மைக்குத்தான் - இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கூட்டத்தின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவதற்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு அல்லவா - அந்த வகையில் நிரம்பவே வரவேற்கிறோம் - எதிர்பார்க்கிறோம்.

நேற்றைய (31.10.2021) 'தினமலர்' ஏட்டில் யாரோ எழுத்தாளராம் - அவர் பெயர் எஸ். ராமசுப்பிரமணிய னாம். கட்டுரையின் தலைப்பு "குலக்கல்வியும்  - தொழிற் கல்வியும்!" என்பதாகும். என்ன சொல்ல வருகிறார்கள்?

"கடந்த 1953 ஏப்ரல் 16இல் ராஜாஜி சென்னை மாகாணத் தின் முதல் மந்திரியாக இருந்தபோது ஒரு சீர்திருத்த முயற்சியை மேற்கொண்டார்.

அதன்படி மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை மாணவியர், பட்டியல் ஜாதியை சேர்ந்த மாணவர்களும் தினமும் மூன்று மணி நேரம் பள்ளிக்கு வந்தால் போதும்.

மற்ற நேரம், பெற்றோருக்கு ஒத்தாசையாகக் கழிக்க லாம் என்று ஒரு சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.

அதாவது, தச்சர் மகனுக்குத் தச்சுத் தொழில் நுட்பமும், தட்டார் மகனுக்கு நகை செய்யும் நுணுக் கமும், சிற்பக் கலைஞர் மகனுக்கு சிற்ப வேலைப் பாட்டு நேர்த்தியும், சமையல் கலைஞர் மகனுக்கு நளபாகமும் பிறவியிலேயே வாய்த்திருக்கும்.

அந்த பண்பு அவரவர் 'ஜீன்' எனப்படும் உடல் மூலக் கூறிலேயே உறைந்திருக்கும்! அந்தப் பண்புகளை தகப் பனார் கூடவே இருந்து மெருகேற்றினால் மேலும் மிளிரும்.

அந்த கோணத்தில், அந்த உயர்ந்த நோக்கத்தில் தான், சென்னை மாகாண முதல் மந்திரியாக இருந்த ராஜாஜி அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார்" என்று கூறுகிறது தினமலர்.

இது தொழிற் கல்வி திட்டம் தானாம். முதல்அமைச்சர் ராஜாஜி தொழிற் கல்வி என்பதற்குப் பதிலாக குலக்கல்வி என்று 'நா' குழறி சொல்லி விட்டாராம்.

உடம்பெல்லாம் மூளை என்று தம்பட்டம் அடிப் பார்களே  - ராஜாஜி பற்றி பார்ப்பனர்கள்! அப்படிப்பட்ட ராஜாஜிக்கா நா குழறி விட்டது? சரி. ஒரு முறைதான் நா. குழறியது - தவறைத் திருத்தி சொல்ல வேண்டியது தானே - அவரைத் தடுத்தது யாராம்....? உண்மை என்னவென்றால் அவர்கள் தொழிற்கல்வி என்று முக்காடு போட்டுக் கொண்டு வந்த திட்டத்தை - குலக் கல்வி என்ற ஒரே  ஒரு வார்த்தை மூலம், அவர்களின் முகமூடியைக் கிழித்து சுக்கல் நூறாக்கி விட்டார் தந்தை பெரியார். மக்களும் விழிப்புணர்வு பெற்றனர் என்பது தான்உண்மை.

சரி... தினமலர் கட்டுரையாளரின் கூற்றுக்கே வருவோம். தச்சர் மகனுக்கும், தட்டார் மகனுக்கும், சமையல்காரர் மகனுக்கும் அந்தத் திறன் தந்தை 'ஜீன்' வழி வருமாம். அதனால்தான் அத்தகைய கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தாராம்.

முதல் தலைமுறையாகக் கல்விக் கூடத்தில் காலடி எடுத்து வைக்கும் (அதுவும் இன்றைக்கு 68 ஆண்டு களுக்குமுன் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!) பிள்ளைகள் அரை நேரம் அதுவும் வெறும் மூன்று மணி நேரம் படிப்பு! மீதி நேரம் அப்பன் தொழில் என்றால் அந்தப் பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக் கல்வி நிலை எந்த அளவுக்கு இருக்கும்?

அந்த வயதிலேயே அப்பன் தொழிலைக் கற்று, நாலு காசைக் கையில் பார்த்து விட்டால், அவர்களின் மனநிலையும், நாட்டமும் எந்தப் பக்கம் சாயும்?

இது சாதாரண பொது அறிவு உடையவர்களுக்குக் கூடத் தெரிந்த சின்ன விஷயம் - இது மெத்தப் படித்த "தினமலர்" வகையறாக்களுக்குத் தெரியாமல் போயிற்று என்று சொல்ல மாட்டோம் - எப்படியாவது அவர் களின் குலகுருவான ராஜாஜியை விட்டுக் கொடுக்க முடியாதே - காப்பாற்றியாக வேண்டுமே - அந்தப் பூணூல் இனவுணர்வுதான் 68 ஆண்டுகளுக்குப் பிறகும் அவாளை ஆட்டிப் படைக்கிறது.

தச்சர் மகன், தட்டார் மகன், சமையற்காரர் மகன் என்று பட்டியல் போடும் பார்ப்பன எழுத்தாளர் புரோகிதர் மகன், கருமாதி மந்திரத்தையும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே ஏன்?

கருமாதி பார்ப்பான் மகன் மட்டும் காலையில் மூன்று மணி நேரம் பள்ளியில் படிப்பு; பிற்பகலில் - அக்கிரகாரத்து மாமி, பாட்டி கூடப் படித்தவர்கள் ஆதலால், அவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். இந்தப் பார்ப்பனர் அல்லாதார் கல்வி வாய்ப்பை இந்தக் 'கண்ணி வெடி' மூலம் தகர்க்க வேண்டும் என்பது தானே ஆச்சாரியாரின் நோக்கம்.

அதுவும் போகட்டும்; அவர்கள் சொல்லும் தொழிற் கல்வியாகவே இருந்து தொலையட்டும் - அரை நேரம் பள்ளிப் படிப்பு என்பதோடு நிறுத்த வில்லையே! 6000 பள்ளி களை இழுத்து மூடினாரே ஆச்சாரியார் அதன் நோக்கம் என்ன?

1953இல் மட்டுமல்ல; 1937இல் ஆச்சாரியார் சென்னை மாநில முதல் அமைச்சராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியவர்தானே!

இவற்றை எல்லாம் அறியாத்தனத்தால் ஆச்சாரியார் செய்துவி டவில்லை. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம் - பார்ப்பனர்களின் வருண தர்மத்தின் கோட்பாடு!

அதிலே ஆச்சாரியார் உறுதியாக இருந்த காரணத் தால்தான் அந்த வேலைகளை மிக சூட்சமமாக அவருக்கே உரித்தான நரித்தனத்தோடு செய்தார் என்பதுதான் உண்மை- உண்மையிலும் உண்மை!

'பிராமணர்' மற்றும் ஜாதிபற்றி ஆச்சாரியாரின் அழுத்தமான எண்ணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் 1953 குலக்கல்வித் திட்டம் எந்த அடிப்படையில் அவர் மூளையில் உருவானது என்பதை எளிதில் உணர முடியும்.

Infact in one occasion Rajaji proudly said that he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan April (1) 1978 Gandhiji's crusade Against Casteism).

முதல்அமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக பெருமையாக நேசிக்கிறேன்" என்றவர்தானே.

முதல் அமைச்சராக ஆச்சாரியார் இருந்தபோது திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் என்ன பேசினார்?

"அவரவர் ஜாதித் தொழிலை அவரவர் செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை. குலத் தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்து விட்டால் வேலை எங்கி ருந்து கிடைக்கும்?"

('தி இந்து' 30.6.1952)

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆச்சாரியார் குலக் கல்வி திட்ட அறிவிப்புக்கு முன்பே  இந்தக் குலக்கல்வி மனப்பான்மையோடு இருந்தார் என்பதுதான்!

ஜாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. இதை நன்கு யோசித்துதான் நம் முன்னோர்கள்  வர்ணாசிரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவரவர்கள் தங்கள் முறைக்கேற்றவாறு நடந்து மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும்"

(கரூர் பசுபதிபாளையத்தில் ஆச்சாரியார் உரை 'சுதேசமித்திரன்' பக்கம் 1 - 29.1.1961)

ராஜாஜியின் இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால் தான் 1953இல் அவர் கொண்டு வந்தது ஜாதியின் அடிப்படையிலான  குலக் கல்வியே என்பது மிகப் பச்சையாகவே தெரியும் - புரியும்.

குலக் கல்வி திட்டத்தை எதிர்த்த தி.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வாரிசுகளை தங்கள் தொழிலான அரசியலிலே வைத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகிறார் 'தினமலர்' எழுத்தாளர்.

அரசியலில் ஈடுபடுவதும், பொதுத் தொண்டாற்று வதும் ஒரு தொழில் என்று சொல்லும் 'அதிமேதாவியை' இப்பொழுதுதான் பார்க்கிறோம்.

எடுத்துக்காட்டாக சிலவற்றை நம்மால் கேட்க முடியும்.

இந்தியாவில் முன்னணித் தலைவர்களுள் ஒருவ ராகக் கருதப்படும் சரத்பவாரின் மூதாதையர் மண் பாண்டம் செய்தவர்கள். அவருடைய மூதாதையர் தொழிலைக் கற்று அதிலே ஈடுபட்டிருந்தால் சரத்பவார் மராட்டிய மாநில முதல் அமைச்சராக ஒன்றிய அமைச் சராக வந்திருக்க முடியுமா?

மும்பை வந்து தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் நுழைந்து ஒரு நிலையை எட்டிப் பிடிக்க முடிந்தது. அவர் வாழையடி வாழையாக அரசியல் குடும்பத்தில் வந்தவர் கிடையாதே!

இசைஞானி இளையராஜாவின் பாட்டனார்  எஸ்டேட் கூலித்தொழிலாளி. சொந்த வீடு கிடையாது.

"குலத் தொழிலைப் பின்பற்றி இருந்தால் இன்று உலகம் போற்றும் இசைஞானியாக ஒளிர முடியுமா?

பச்சைத் தமிழர் காமராசர் அரசியலில் ஆச்சாரியாரை வீழ்த்தி அவதானித்திருக்க முடியுமா?

தி.க., தி.மு.க. காங்கிரசின்  வாரிசு அரசியல் பேசும் இவர்கள் பா.ஜ.க.வில்  கொத்துக் கொத்தாக குடும்ப வாரிசுகளாக ஜொலிக்கிறார்களே! அதைப்பற்றி மூச்சு விடாதது ஏன்? (தனிப் பட்டியல் காண்க).

ஓ, மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி - அதுதானே பார்த்தோம்!


Posted by parthasarathy r at 06:41
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: குலக்கல்வி, தினமலர், பதிலடி

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

மூலிகை மன்னன்

மூலிகை மன்னன்
செ.ர.பார்த்தசாரதி
Powered By Blogger

Search This Blog

Translate

About Me

parthasarathy r
View my complete profile

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

Followers

Blog Archive

  • ►  2025 (28)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  May (5)
    • ►  March (4)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2024 (53)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (13)
    • ►  September (5)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (10)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2023 (51)
    • ►  December (3)
    • ►  November (9)
    • ►  October (5)
    • ►  August (6)
    • ►  May (8)
    • ►  April (5)
    • ►  March (11)
    • ►  February (3)
    • ►  January (1)
  • ▼  2022 (42)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (8)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (1)
    • ▼  March (6)
      • எழுத்தாளர் சுப்ர. பாலன் பெரியார் திடலில் தமிழர் தல...
      • சென்னை கோடம்பாக்கம் இரயில் நிலையத்தில் ஹிந்திக்கு ...
      • பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க...
      • ஆச்சாரியார் கொண்டு வந்தது குலக்கல்வியா - தொழிற் கல...
      • பிறந்தநாள் நன்கொடை
      • தமிழுக்கு மூன்றாம் இடமா?
    • ►  February (10)
    • ►  January (3)
  • ►  2021 (81)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (13)
    • ►  September (3)
    • ►  August (9)
    • ►  July (11)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (20)
    • ►  January (5)
  • ►  2020 (80)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (5)
    • ►  June (8)
    • ►  May (24)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (12)
    • ►  January (5)
  • ►  2019 (61)
    • ►  December (6)
    • ►  November (5)
    • ►  October (5)
    • ►  September (5)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  May (3)
    • ►  April (7)
    • ►  March (3)
    • ►  February (9)
    • ►  January (8)
  • ►  2018 (34)
    • ►  December (2)
    • ►  November (3)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (1)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2017 (31)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (4)
  • ►  2016 (33)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (10)
    • ►  August (1)
    • ►  June (5)
    • ►  May (4)
  • ►  2015 (7)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  August (1)
    • ►  May (1)

Popular Posts

  • கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்த உ வே சாமிநாதையரும் வ.சு அய்யரும்
    1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உவே சாமிநாத அய்யர் 1922ஆம்...
  • அவதூறு பரப்பும் சீமான் மீது நடவடிக்கை கோரி புகார் மற்றும் விரிவான விளக்கம்
    பார்ப்பன அடிவருடியாகவும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கைக்கூலியாகவும் ஆகிவிட்ட சீமான் சில காலமாக தந்தை பெரியாரைப் பற்றி அவதூராகவும் ...
  • மே தினமா? விஸ்வகர்மா ஜெயந்தியா? எது தொழிலாளர் தினம்?
    பெல் ம. ஆறுமுகம் உலகிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தொழிலாளர் நாளாக மே முதல் நாளை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஆர்....
  • ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி
     ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தே...
  • ஒபிசி சான்றிதழ் பெறும் வழிமுறை
    ஓபிசி சான்றிதழ் - சில தகவல்கள் - குடந்தை கருணா மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்...
  • சூத்திரன் குடிக்கத் தடை செய்யப்பட்ட மாட்டுப் பால்! -செ.ர.பார்த்தசாரதி
    வைணவ மதத்தை பரப்பிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நாதமுனி ஆழ்வார் அவர்களின், ‘விஷிஷ்டாத்வைதம்’ என்ற கொள்கைக்கு வேத முறைப்படி விளக்க உரை கூ...
  • ‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி!
      Published August 22, 2024, விடுதலை நாளேடு கைவல்யம் பிறந்த நாள் இன்று (22.8.1877) ‘சூத்திரன்’ என்றால் ஆத்திரம் கொண்டு அடி! கைவல்யம் (1877-1...
  • திராவிடர் இயக்கம் தோன்றிய வரலாறு
    *வரலாறு அறிவோம்.* ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். *பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பி...
  • தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)
    தொழிலாளர் நலச் சட்டங்கள் - 4 • கே.ஜி. சுப்பிரமணியன் தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 ஒரு தொழிற் துவக்கிய பிறகு முறையாகத் தொழிற்...
  • வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம் - செ.ர.பார்த்தசாரதி
    - செ.ர.பார்த்தசாரதி புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் ...

Labels

  • 100 நாள்
  • 2024
  • 27 சதவிகித இடஒதுக்கீடு
  • 5 வயது
  • 8மணி நேரம்
  • standing order
  • அ.குணசீலன்
  • அக்னி
  • அக்னி பகவான்
  • அடி
  • அடிப்படை கடமைகள் 51a
  • அண்ணா
  • அண்ணாதுரை
  • அண்ணாமலை
  • அநீதி
  • அமெரிக்கா
  • அம்பேத்கர்
  • அயோக்கியர்கள்
  • அயோத்திதாசர்
  • அய்ந்து ஆவணங்கள்
  • அய்யா
  • அரசாணை
  • அரசு
  • அரசு ஆணை
  • அரசு திட்டங்கள்
  • அரிச்சுவடி
  • அருங்காட்சியகம்
  • அருவறுப்பு
  • அர்ச்சகர்
  • அவசர உதவி
  • அளவு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிவியலாளர்
  • அறிவு
  • அறுவை சிகிச்சை
  • அற்றவர்
  • அனுமதிசான்றிதழ்
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
  • அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
  • ஆகமம்
  • ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை
  • ஆங்கில அரசு
  • ஆசிட் தியாகராசன்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் மகள்
  • ஆசிவகம்
  • ஆட்சி
  • ஆட்சி அதிகாரம்
  • ஆணை
  • ஆணையம்
  • ஆதார்
  • ஆதி திராவிடர்
  • ஆதிச்சநல்லூர்
  • ஆதிதிராவிடர்
  • ஆதித்த கரிகாலன்
  • ஆயகலைகள்
  • ஆய்வு
  • ஆரிய பார்ப்பான்
  • ஆரியர்
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்கனைசர்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆலய பிரவேசம்
  • ஆவடி
  • ஆவணம்
  • ஆளுநர்
  • ஆஷ் துரை
  • இசுலாம்
  • இசை
  • இசைப்பள்ளி
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இடிப்பு
  • இடுகாடு
  • இணையதளத்தில் பதிவு
  • இணையேற்பு
  • இதயம்
  • இதர பிற்படுத்தப்பட்டோர்
  • இதழ்
  • இந்தி
  • இந்தியா
  • இந்து
  • இந்து அல்ல
  • இந்து மதம்
  • இம்மானுவேல்
  • இயேசு
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரயில்
  • இரயில்வே
  • இராமதாசு
  • இராமராஜ்ஜியம்
  • இராமன்
  • இராமாயணம்
  • இராமேஸ்வரம்
  • இராஜகோபாலாச்சாரி
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலக்கியம்
  • இலக்குமணன்
  • இலவசம்
  • இறுதிப் பேருரை
  • இனக்குழு
  • இனம்
  • இனவெறி
  • ஈரோடு
  • உ.பி
  • உ.வே.சா
  • உங்களுக்குத் தெரியுமா
  • உச்ச நீதிமன்றம்
  • உச்சநீதிமன்றம்
  • உஞ்சவிருத்தி
  • உடைப்பு
  • உணவு விடுதி
  • உதவி
  • உத்தரவு
  • உத்திரமேரூர் கல்வெட்டு
  • உயர் நீதிமன்றம்
  • உயர்நிலை
  • உரிமை
  • உருக்கு இரும்பு
  • உருண்டை
  • உவேசா
  • உழைப்பு
  • உறுதிமொழி
  • உறுப்பினர்
  • ஊதியம்
  • ஊர்
  • ஊழல்
  • எதிர்ப்பு
  • எபிகூரசு
  • எபிகூரஸ்
  • எம்ஜிஆர் நகர்
  • எருக்கஞ்சேரி
  • எழிலன்
  • எழுத்து
  • எனது
  • எனது கட்டுரை
  • ஒ.பி.சி.
  • ஒப்புதல்
  • ஒரே தேர்தல்
  • ஒரே நாடு
  • ஒலிப்பு
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்றியம்
  • ஓசி சோறு
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வூதியம்
  • கச்சத்தீவு
  • கடமை
  • கடவுள்
  • கட்டுரை
  • கணக்கீடு
  • கணக்கு
  • கணக்கெடுப்பு
  • கணபதி
  • கண்டு பிடிப்பு
  • கண்ணதாசன்
  • கத்தோலிக் சர்ச்
  • கந்தன்
  • கம்பராமாயணம்
  • கம்யூனிசம்
  • கருத்துரை
  • கரோனா
  • கர்ணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைஞர் உலகம்
  • கல்பாத்தி
  • கல்லூரி
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கவிஞர்
  • கவிஞர் கலிபூங்குன்றன்
  • கழகம்
  • கழிப்பறை
  • கழுவேற்றம்
  • கற்பழிப்பு
  • காட்டுமிராண்டி மொழி
  • காந்தி
  • காமராஜர்
  • காமலீலை
  • காரணம்
  • காரல் மார்க்ஸ்
  • காராம் பசு
  • காலக் கணக்கு
  • காவிரிச் செல்வன்
  • காஷ்மீர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கிராம நிர்வாகம்
  • கிரிகோரியன்
  • கிருத்துவம்
  • கிளைக் கழகம்
  • கீரி
  • குங்குமம்
  • குடும்ப அட்டை
  • குணம்
  • குமரேச சதகம்
  • குமாரசம்பவம்
  • குரான்
  • குலக்கல்வி
  • குறைந்தபட்ச ஊதியம்
  • கூட்டணி
  • கூட்டாட்சி
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கேள்வி-பதில்
  • கைது
  • கைவல்யம்
  • கொடி
  • கொடுங்கையூர்
  • கொடுமை
  • கொலை
  • கொலை முயற்சி
  • கோடம்பாக்கம்
  • கோடு
  • கோயில்
  • கோயில் அகற்றல்
  • கோயில் நுழைவு
  • கோல்வால்கர்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சார்
  • சட்டமன்ற உறுப்பினர்கள்
  • சட்டம்
  • சண்டை
  • சத்தியவாணி முத்து
  • சத்திரியர்
  • சந்தா
  • சந்திப்பு
  • சமணம்
  • சமணர்
  • சமஸ்கிருதம்
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி நாள்
  • சமையல்
  • சம்பிரதாயம்
  • சாதனை
  • சாதி
  • சாதி ஒழிப்பு
  • சாதி கொடுமை
  • சாதி சான்றிதழ்
  • சாதிவெறி
  • சாமிநாதன்
  • சாய்பாபா
  • சான்றிதழ்
  • சி.பி.எஸ்.ஈ
  • சிகாமணி
  • சிக்கனம்
  • சிங்காரவேலர்
  • சிந்தனை
  • சிந்தனை முத்து
  • சிபிஎஸ்சி
  • சிவகளை
  • சிவம்
  • சிறுகதை
  • சீடர்
  • சீதை
  • சீமான்
  • சீர்காழி கோவிந்தராசன்
  • சீனிவாச அய்யங்கார்
  • சுதந்திரப் போராட்டம்
  • சுந்தரம்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை திருமண சட்டம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சூத்திரர்
  • சூத்திரர்கள்
  • சூத்திரன்
  • சூத்திரன் நீக்கம்
  • சூரிய மறைப்பு
  • செ.ர. பார்த்தசாரதி
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கை
  • செம்பரம்பாக்கம்
  • செலவு
  • செல்வேந்திரன்
  • சென்னை
  • சேது கால்வாய்
  • சைதாப்பேட்டை
  • சைதை கூட்டம்
  • சைவம்
  • சொக்கலிங்கம்
  • சொத்து
  • ஞாயிறு மலர்
  • ஞாயிறு மலர் கட்டுரை
  • டி.என்.பி.எஸ்.சி.
  • தகைசால் தமிழர்
  • தண்ணீர் தொட்டி
  • தந்தை பெரியார்
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழன்
  • தமிழினம்
  • தமிழ்
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பைபிள்
  • தமிழ் மொழி
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்நாடு
  • தலாக்
  • தலையங்கம்
  • தலைவர்
  • தலைவெட்டி முனியப்பன்
  • தன்னிலை விளக்கம்
  • தாவரம்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமிர்
  • தியாகராயர்
  • திராவிட நாடு
  • திராவிட வீராங்கன
  • திராவிடம்
  • திராவிடர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் மொழி
  • திராவிடர்கள்
  • திருடன்
  • திருநீறு
  • திருமண வரலாறு
  • திருமணம்
  • திருமாவேலன்
  • திருமூலர்
  • திலகர்
  • திறப்பு
  • தினமலர்
  • தீ
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துறவி
  • தூக்கு
  • தூய்மைப் பணியாளர்கள்
  • தென் சென்னை
  • தேசபக்தி
  • தேர்ச்சிக்கு சமம்
  • தேர்வு
  • தை
  • தொண்டு
  • தொலைபேசி
  • தொழிலாளர்
  • தொழிற்சாலை
  • தோள்சீலை
  • தோள்சீலைப் போராட்டம்
  • நடக்க உரிமை
  • நம்பூதிரி
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நன்மை
  • நன்னன்
  • நாடார்
  • நாள்காட்டி
  • நான்
  • நிதி
  • நியமனம்
  • நியூயார்க் டைம்ஸ்
  • நிலம் அளனவ
  • நிலவு
  • நிலையானைகள்
  • நினைவிடம்
  • நீசபாசை
  • நீட்
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீதிக்கட்சி அரசாணை
  • நுங்கம்பாக்கம்
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நூல் விமர்சனம்
  • நூற்றாண்டு
  • நேரம்
  • நேர்காணல்
  • நோய்
  • பகத்சிங்
  • பசு
  • பசுவதை
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சமா பாதகம்
  • பஞ்சாப்
  • படக்கதை
  • படத்திறப்பு
  • படம்
  • படிம வளர்ச்சி
  • பட்டா
  • பட்டியல்
  • பணம்
  • பணிநிறைவு
  • பதவிகள்
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிவு திருமணம்
  • பயிற்சி
  • பரமசிவம்
  • பழமொழி
  • பழனி
  • பள்ளி
  • பள்ளி சான்றிதழ்
  • பள்ளிக்கல்வி
  • பறைச்சி
  • பறையர்
  • பறையன்
  • பனகல் அரசர்
  • பன்முகம்
  • பா.சிவக்குமார்
  • பா.ஜ.க.
  • பாகிஸ்தான்
  • பாடல்
  • பாதிரியார்
  • பாம்பு
  • பார்க்க வேண்டிய இடம்
  • பார்த்தசாரதி
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர் ஊழல்
  • பார்ப்பனர்கள் ஆதிக்கம்
  • பார்ப்பான்
  • பாலம்
  • பாலியல் கொடுமை
  • பாலியல் துன்புறுத்தல்
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பான்காடு
  • பிச்சை
  • பிராமணர்
  • பிரிட்டிஷ் ஆட்சி
  • பிரியன்
  • பிள்ளையார்
  • பிறந்தநாள்
  • பினராயி விஜயன்
  • பிஜேபி
  • புகழ்
  • புகார்
  • புதியகல்வி
  • புதுப்பிப்பு
  • புதுவை
  • புத்தர்
  • புத்தர் சிலை
  • புவி
  • புறம்போக்கு
  • பெண்
  • பெண்கள்
  • பெயர்
  • பெயர் சூட்டல்
  • பெயர் நீக்கம்
  • பெரியாரியல்
  • பெரியார்
  • பெரியார் உலகம்
  • பெரியார் மண்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மேளா
  • பெரியார் மையம்
  • பெரியார் விருது
  • பேட்டி
  • பேதம்
  • பேரணி
  • பேரவை
  • பேருந்தில் இலவசம்
  • பைபிள்
  • பொதுக்கூட்டம்
  • பொதுவுடமை
  • பொருளாதாரம்
  • போப்
  • போராட்டம்
  • பௌத்தம்
  • பௌத்தர்
  • ம.பொ.சி.
  • மணியம்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மண்
  • மதசார்பின்மை
  • மதம்
  • மதிப்பு
  • மதிப்பெண்
  • மதிப்பெண் ஊழல்
  • மத்மாநாடு
  • மருத்துவம்
  • மலம்
  • மலையாளம்
  • மறைவு
  • மனுதர்மம்
  • மன்னர்கள்
  • மஹத் போராட்டம்
  • மாட்டுப்பால்
  • மாநாடு
  • மாநில பிரிவு
  • மாலன்
  • மாற்றுத்திறனாளி
  • மாஸ்கோ
  • மின் அஞ்சல்
  • மின் இணைப்பு
  • மின் நூல்
  • மின்சாரம்
  • மின்னஞ்சல்
  • மின்னூல்
  • மீட்பு
  • முகவரி
  • முத்துராமலிங்கம்
  • முரசொலி
  • முருகன்
  • முனைவர் பட்டம்
  • முன்னேற்றம்
  • மூக்நாயக்
  • மூடநம்பிக்கை
  • மெரினா
  • மே நாள்
  • மேளம்
  • மைல்கல்
  • மொழி
  • மோசடி
  • மோடி
  • யுனெஸ்கோ
  • ரயில்வே
  • ரவிக்கை
  • ராமர் பாலம்
  • ராமானுஜர்
  • ராஜாஜி
  • ரிஷி
  • லக்னோ
  • லண்டன்
  • லால் பகதூர் சாஸ்திரி
  • வசை
  • வணிகக் கட்டடங்கள்
  • வண்ணார்
  • வயது
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வருமான சான்றிதழ்
  • வர்ணம்
  • வழக்கு
  • வளர்ச்சி
  • வாஞ்சிநாதன்
  • வாரிசு
  • வாலிபர் மாநாடு
  • வாழ்க்கை வரலாறு
  • வி பி சி ங்
  • விடுதலை அலுவலகம்
  • விடுதலை புலிகள்
  • விபூதி வீரமுத்து
  • விமர்சனம்
  • வியப்பு
  • விருது
  • விருப்ப மொழி
  • வில்லிவாக்கம்
  • விவேகாநந்தர்
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • வெப்பம்
  • வெற்றிச்செல்வி
  • வேண்டாம்
  • வேதம்
  • வைக்கம்
  • வைத்தியநாதன்
  • ஜாக்கெட்
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதிப் பிரிவு
  • ஜெயலலிதா
  • ஜெயலெட்சுமி
  • ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்
  • ொத்துரிமை
Simple theme. Powered by Blogger.