Friday 6 March 2020

பிராமணன் என்பதில் பெருமை! - இராஜாஜி (மாலன்களின் “புளுகுப் புராணம்!)

- கவிஞர் கலி.பூங்குன்றன்

சன் தொலைக்காட்சி (திமுக) மூலம் வெளி உலக வெளிச்சத்துக்கு வந்து - திமுக தலைவர் கலைஞரால் “உதவிகள்” பெற்று - அதற்குப் பின் பல “அவதாரங்களை எடுத்தவர்” மாலன் என்ற நாராயணன்.

இப்பொழுது அவர் ‘துக்ளக்‘கின் ஆஸ் தான எழுத்தாளர் - பாரதீய ஜனதாவின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளர். இந்த வார ‘துக்ளக்‘ இதழில் (26.2.2020) “தலித் விரோத அரசா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தீட்டியுள்ளார். அதில் ராஜாஜி பற்றி பலபடப் பாராட்டியுள்ளார் - இதில் ஆச்சரி யப்படுவதற்கு ஏதுமில்லை. அது அவாளின் பூணூல் பாசம்.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கே அந்தப் பிறவிக் குணம் போகவில்லை என்கிறபோது நாராயண மாலன்களுக்கும் அந்த உணர்ச்சி ஓங்கி நிற்பதில் ஆச்சரியம் இருக்க முடி யாது.

‘கேரவன்’ ஏட்டில் வெளிவந்த செய்தி தான் அது.

Infact, one occasion Rajaji proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (Caravan, April (1) 1978 - Gandhiji’s Crusade against Casteism).

முதல் அமைச்சர் என்கிற பதவியை விட பிராமணனாக இருப்பதில்தான் பெரு மையு றுவதாகப் புளகாங்கிதம் அடைந்தவர் ராஜாஜி.

தாழ்த்தப்பட்டவருக்காக சித்தூர் சென்று வாதாடியதாக ஒரு தகவலை விவரித்து எழுதியுள்ளார் தோழர் மாலன்.

அது எப்படியோ இருக்கட்டும்; தாழ்த் தப்பட்டவர் விடயத்தில் ராஜாஜி எப்படி நடந்து கொண்டு இருக்கிறார் என்பதை அண்ணல் அம்பேத்கர் வாயிலாகவே கேட்டு விடுவோம்.

“நான் அந்தக் காலத்தில் எக்சிகியூட்டிவ் கவுன்சில் மெம்பராக இருந்த போது வெள் ளைக்கார வைசிராயுடன் பேசி விளக்கி, தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து திறமை மிக்க மாணவர்களைப் பொறுக்கி எடுத்து மேல்நாட்டுக்கு அனுப்பி கல்வி பெற வசதியளிக்கும் திட்டத்தை சர்க்கார் செய்ய வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொள் ளும்படிச் செய்தேன்.

அதன்படி அப்பொழுது ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்கினார்கள். இது தொடர்ந்து நடந்து வந்தது. நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகியவுடன் என் நண்பர் ராஜகோபாலாச்சாரியார் இதை ஒழித்துக்கட்டி விட்டார்.”(Report of  Backward Classes Commission, Vol. III page 75, para 2).

இதுதான் மாலன் மகத்துவமாக ராஜாஜி பற்றிக் கூறும் ராஜாஜியின் தலித் மீது கொண்ட ‘தகத்தகாய காதல்’

ராஜாஜியின் பார்ப்பனப் பற்று எத்தகை யது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட் டையும் கூற முடியும் - அதுவும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் எழுத்துக் களிலிருந்தே காட்ட முடியும்.

“தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகப் போருக்கு உரிய களனாக வேதாரண்யம் குறிக்கப்பட்டது. இராஜகோபாலாச்சாரி யார் தண்டுகளுடன் திருச்சியினின்றும் புறப் பட்டார்.

சிதம்பரத்தினின்றும் ஒரு தண்டை நடத்திச் செல்லத் தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட சிலர் முயன்றனர். அதற்கு என் தலைமை விரும்பப்பட்டது. அவ்விருப்பத் தைக் குலைக்க என் மனம் எழவில்லை. அச்சமயத்தில் இராஜகோபாலாச்சாரியார் பிடிபட்டதும், தொடர்ந்த போருக்கு யான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கேள்வி யுற்றேன்.

இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதவில்லை. வேறு வழியாகவும் தெரி யப்படுத்தவுமில்லை. எனது நியமனம் வெறும் வதந்தி என்று கருதினேன். எதற் கும் சித்தமாயிருக்கலாமென்று எண்ணி னேன்.

திருச்சியினின்றும் புறப்பட்ட படை யையன்றி, வேறு படைகள் யாண்டும் திரளலாகாதென்றும், அதை வேதாரண் யம் நோக்கலாகாதென்றும் ஓர் அறிக்கை இராஜகோபாலாச்சாரியாரிடமிருந்து வெளிவந்தது. ஆச்சாரியாருக்குப் பின்னர் கே.சந்தானம் நியமிக்கப்பட்ட செய்தியும் எட்டியது. சிதம்பர முயற்சி சிதறியது. எழுந்த என் உள்ளமும் விழுந்தது. நிகழ்ந்தது இவ் வளவே!

பத்திரிகை உலகம் திருவிளையாடல் புரியத் தொடங்கியது. சில பத்திரிகைகள் ‘கலியாண சுந்தர முதலியார் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சித்தமாயிருந்தார், ஏமாற்றப்பட்டார், ஒரு பிராம ணரல்லாதார் தலைமை பூண்டு படை யைத் திரட்டிச் செல்லப் பிராமணன் கண் பார்க் குமோ’ என்று எழுதினர்.”

(திரு.வி.க. எழுதி வைத்த வாழ்க்கைக் குறிப்பு 1, பக்கம் 318-319).

பாவம் - மாலன் ரொம்பதான் ராஜாஜி யைத் தூக்கிச் சுமக்கப் பார்க்கிறார். ஆனால் உண்மையோ ஜன்னலுக்கு வெளியே

வேறு திசையில் பயணிக்கிறது.

******

மாலனின் அறியாமையா? அண்டப் புளுகா?

“இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்திரா சஹானி வழக்கின் காரணமாக பட்டியலினத்தவரின் பதவி உயர்வுக்கு ஆபத்து ஏற்பட்டபோது அரசமைப்பு சட்டத்தைத் திருத்தி அவர்களுக்குப் பாதுகாப்பளித்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய். தவிர, நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்”.

- இதுவும் அதே ‘துக்ளக்‘ இதழில் (26.2.2020, பக்கம் 23) திருவாளர் மாலன் எழுதியுள்ளார்.

இது உண்மையா? இந்திரா சஹானி வழக்கில் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது உண்மைதான்.

அந்த நேரத்தில், மத்திய ஆட்சியில் இருந்தவர் பி.வி.நரசிம்மராவ், சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சீத்தாராம்கேசரி. அவர்தான் முன்னெடுத் தார். அரசமைப்பு சட்டத்திருத்தம் 77இன் படிதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு வழிச்செய்யப்பட்டது.(The constitution (Seventy - Seventh Amendment) Act 1995 - 17th June 1995. Amendment of Article 16 (4A))
“(4A) Nothing in this article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of th States are not adequately represented in the services under the State”

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீத்தாராம்கேசரி அவர்களின் துறையின் சார்பாக சட்டம் நிறை வேற்றப்பட்டதுதான் உண்மை.

1995இல் ஆட்சியில் இல்லாத வாஜ்பேயி, பிரதமராக இருந்த போதுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக எழுதுவது மாலனின் அறியாமையா - அண்டப் புளுகா?

- விடுதலை ஞாயிறு மலர் 22 2 20

No comments:

Post a Comment