Friday 8 October 2021

3.30 லட்சம் சிறார்களுக்கு பாலியல் கொடுமை; பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டு

 

பாரிஸ்அக். 7- கடந்த 70 ஆண்டுகளில் பிரான்சின் கத்தோலிக்க சர்ச்களில், 3.30 லட்சம் சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது.

அய்ரோப்பாவைச் சேர்ந்த பிரான்சு நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பெர்னார்டு பிரேநட் என்ற கத்தோலிக்க பாதிரி யார்சிறார் பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்விசாரணையில் 75 சிறார் களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப் புக் கொண்டார்அவ ருக்கு அய்ந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் உள்ள கத்தோலிக்க ஆல யங்களில், 1950ஆம் ஆண்டு முதல் 2020 வரை சிறாருக்கு நடந்த பாலி யல் கொடுமைகள் குறித்துஜீன் - மார்க் சாவி என்பவர் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியதுஇந்த ஆணை யம், 2,500 பக்கங்கள் உள்ள விசாரணை அறிக்கையை கத்தோலிக்க தலைமை ஆலயத்துக்கு அனுப்பி உள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவதுஇரண்டரை ஆண்டுகள் நடந்த இந்த விசாரணை யில் சிறார் மீதான பாலி யல் கொடுமைகள்குறித்து வலுவான ஆதாரங்கள் உள்ளவற்றை மட்டுமே ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுஇது தொடர்பாக 70 ஆண்டுகளில் கத்தோ லிக்க சர்ச்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 500 பாதிரி யார்கள் உள்ளிட்டோர் குறித்து ஆணையம் ஆய்வு செய்ததுஅதில், 3,000 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

அவர்களில் மூன்றில் இரு பங்கினர் பாதிரி யார்கள்இந்த வகையில் 3.30 லட்சம் சிறார்கள்பெண்கள் உள்ளிட்டோர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்இவற்றில் 40 பாலியல் குற்றங்கள் நடந்து மிக நீண்ட காலமாகி விட்டது. 22 குற்றங்களில் சம்பந்தப் பட்டவர்களும்பாதிக்கப் பட்டோரும் உயிருடன் உள்ளதால் வழக்கு தொடுக்க பரிந்து ரைக்கப் பட்டுள்ளது.

ஆலயங்களில்சிறார் மீதான பாலியல் கொடு மைகளை தடுப்பது தொடர் பாக 45 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளனஅவற்றை செயல்படுத் தினால் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் குறையும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment