Friday 20 August 2021

கைபர் போலன் அடிமைகளின் கேள்விளுக்குப் பதில்கள்:


பெரியார் பயிற்சிக் களம் குழுவில் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களின் முகநூல் பக்கம் பகுதியில் வெளி வந்தது...
20.08.21

"முடிந்தால் பதில் சொல்லுங்கள்", என நண்பர் ஒருவர் 22 கேள்விகளை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். பதில் சொல்லாவிட்டால், கேள்விகள் உண்மையாகிவிடும் 

1) பிராமணர்கள், கடவுளின் பெயரால் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி லவ் ஜிகாத் செய்து கல்யாணம் செய்கிறார்களா?
(இந்தக் கேள்வியே இவர்கள் யாரென்று சொல்லிவிடும். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் லவ்ஜிகாத் என்னும் புரளியைப் பற்றவைத்ததே இவர்கள் தான்! இருக்கட்டும்.)

கடவுளின் பெயரால் ஒரு சமூகத்துப் பெண்களையே பொட்டுக்கட்டி பொதுப் பண்டமாக ஆக்கிவைத்திருந்த தேவதாசி முறையை உருவாக்கியவர்களே பார்ப்பனர்கள் தானே! அந்தக் கொடுமையை ஒழிக்க முனைந்த போது அதற்கு சட்டசபையிலேயே எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் பார்ப்பனர்கள் தானே!

கடவுளின் பெயராலும், வேதத்தின் பெயராலும் சமூகத்தில் பார்ப்பனியம் திணித்த பல கொடுமைகளில் ‘பால்ய விவாகம்’ என்ற குழந்தைத் திருமணமும் ஒன்று. 5 வயது, 6 வயதிலேயே திருமணம் செய்யும் கொடுமை பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டது. பார்ப்பனக் குடும்பங்களில் இது அதிகம் நடந்தது. இதனால் பெண் குழந்தைகள் மரணமும் இளம் விதவைகள் எண்ணிக்கையும் அதிகரித்தது. சட்டம் தடை செய்துவிட்டாலும் இன்னமும் ஆங்காங்கே நடக்கிறது.

2) பிராமணர்கள் ஊருக்கு ஒன்றாக 4 பெண்களை கல்யாணம் செய்கிறார்களா?

ரொம்ப யோசிக்க வேண்டாம். பிரபல சினிமா காதல் மன்னன், புன்னகை மன்னன் போன்றவர்களெல்லாம் யாரு?

3) பிராமணர்கள், மணல் கடத்தல் செய்கிறார்களா? பிராமணர்கள் நில அபகரிப்பு  செய்கிறார்களா?

மணல் கடத்தல் பற்றி முழுதாகத் தெரிய வரட்டும். ஆனால், கல் கடத்துகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.  பல கடவுள் சிலை கடத்தல்களில் பார்ப்பனர்கள் பெயர்கள் முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டது உலகுக்கே தெரியுமே!

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலத்தில் கோயிலில் பல கோடி மதிப்புள்ள நிலங்கள், கட்டிடங்கள், கோயில் நகைகள் அனைத்தும் பார்ப்பனர்களால் சூறையாடப்பட்டன. பங்கு போட்டுக் கொள்வதில் அடிதடி கலவரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பிரிட்டிஷ் ஆட்சியில் வடகலை தென்கலைப் பார்ப்பனர்கள் கோயில் உரிமைக்கு அடிதடிகளில் இறங்கி, பகுதியையே போர்க்களமாக மாற்றிய நிலையில், பயந்து போன பக்திப் பிரமுகர்களே கோயிலை இவர்களிடமிருந்து காப்பாற்ற பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் திரிவேந்திர சிங் ராவ் முதலமைச்சராக இருந்தபோது பத்ரிநாத், கேதார் நாத் உள்ளிட்ட 51 கோயில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டிலிருந்து அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். அங்கு நடக்கும் கொள்ளைகள் பற்றி புகார் வந்த நிலையில் அரசுடைமையாக்கினார். சுப்ரமணியசாமி அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அரசுடைமை சட்டத்தை சரி என்று ஏற்றுக் கொண்டது உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம். தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் தனது தீர்ப்பில் கோயில்கள் தனியார் வசம் போய் விடக் கூடாது; கங்கை, யமுனை நதிகள்கூட வணங்கப்படுபவை தான்; அதற்காக தனியாரிடம் ஒப்படைக்க முடியுமா என்று கேட்டார்.
வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தபோது உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. பிறகு பா.ஜ.க. தலைமையே பரத்சிங் ராவத் என்பவரை புதிய முதல்வராக்கி மீண்டும் கோயில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைத்தது.

இந்தக் கடத்தல்களையெல்லாம் விட மோசமாக, இந்தத் தேசத்தின் நிர்வாகத்தில் ஊழலில் ஈடுபடுகிறார்கள். இந்திய இராணுவத்தில் கடுமையான முறைகேடுகள் செய்வதோடு, இராணுவ இரகசியங்களைப் பிற நாடுகளுக்குக் காட்டியும் கொடுத்துள்ளனர். 

4) பிராமணர்கள் அடுத்தவனின் மனைவி அல்லது மகளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடுகிறார்களா?

இதற்கு நிறையவே உதாரணம் சொல்லலாமே? தேவநாதன் முதல், சங்கராச்சாரி வரை. அண்மையில் பத்மா சேஷாத்திரி பள்ளி பார்ப்பன ஆசிரியர் ராஜகோபாலன்.

அதுமட்டுமில்லை. ஜாதி, மதத்தைக் காட்டி, வேத, சாஸ்திரங்களைக் காட்டி, பெண்களைக் கூட்டிக் கொடுத்து அரசர்களையும், ஆட்சிகளையும் கவிழ்த்த வரலாறு நெடுகெங்கிலும் கிடக்கிறது.

5) பிராமணர்கள் அரபி அடிமைகளை போல மலக்குடலில் தங்கம் கடத்துகிறார்களா?

நெல்லை மாவட்டத்தின் இயற்கை அரணான மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாபநாசம். பாபநாசத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான பாபநாசநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. அங்கு உதவி அலுவலராக பணியாற்றும் ஒருவரும், அர்ச்சகர் ஒருவரும் சேர்ந்து மக்கள் வழங்கிய 199.5 கிராம் தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. 

மலக் குடலில் தான் கடத்த வேண்டுமா? கடத்திய தங்கத்தை விற்றுத் தின்று மலக்குடலில் தள்ளக் கூடாதா?

6) பிராமணர்கள் கஞ்சா கடத்துகிறார்களா?

எனக்குத் தெரிந்து பல பார்ப்பனர்கள் கஞ்சா குடிக்கிறார்கள். அவர்கள் திருட்டுத்தனமாகத்தான் வாங்குகிறார்கள். அதுவும் கடத்தலில் ஒரு பங்குதானே?

7) பிராமணர்கள் திராவிடிய அரசியல்வாதிகளை போல ஊழல் செய்கிறார்களா?

இந்தியாவின் முதல் ஊழல் வழக்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீதுதானே! தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஏ1 குற்றவாளி மறைந்த ஜெயலலிதா அம்மையார், பச்சையான அய்யங்கார் பெண் தானே! இங்கிருந்த பணத்தையெல்லாம் கொள்ளையடித்து, இங்கிலாந்தில் சென்று ஒளிந்திருக்கும் விஜய் மல்லையா யாரென்று நினைத்தீர்கள்? 

கர்நாடகாவைச் சேர்ந்த  கொங்கணி பார்ப்பனர் தானே! டெலிகாம் ஊழலில் தண்டனை பெற்ற சுக்ராம் பார்ப்பனர் தானே… இன்னும் பெரிய பட்டியல் உண்டு. தாங்குவீர்களா?

8) பிராமணர்கள் வாடிகன் அடிமைகளைப் போல என் மதத்திற்கு வா என்று அடுத்தவனின் கையை பிடித்து இழுக்கிறார்களா?


பல வெள்ளைக்காரர்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் சேர்த்துவிட்டதாகவும், இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்து விட்டதாகவும் பீத்திக் கொள்வது என்னவாம்? 


இப்படி கிறிஸ்தவர்களை, இஸ்லாமியர்களை வம்புக்கு இழுக்கும் இந்தப் பார்ப்பனர்கள் வெட்கமே இல்லாமல் அரபு நாடுகளிலும், அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளிலும் கேவலமாக மண்டியிட்டு வாழ்கிறார்கள்.

9) பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு, பதவிக்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்களா?
.
பார்ப்பனர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுதானே இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சிக்கலே? EWS க்கு 10% இட ஒதுக்கீடு பெற்றது அளவுக்கு மீறிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத்தானே?

10) பிராமணர்கள் மந்திரி பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கிறார்களா?

பார்ப்பனர்கள் மட்டுமே மந்திரிகளாக இருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். முன்பு அது பெரும்பாலும் நடந்தது. இப்போது பெருமளவுக்கு தடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், மத்திய அரசை ஆட்டி வைப்பது எல்லாம் அவாள் தானே! இப்போதும் மந்திரிகளை எப்படி மயக்கலாம், ஒழிக்கலாம் என்பது அவாளுக்கு அத்துபடியான ஒன்று. 


11) பிராமணர்கள் சாராய ஆலை நடத்துகிறார்களா?

சசிகலாவை ஜெயலலிதா அதிமுகவில் இருந்து நீக்கியவுடன் அவருக்கு சொந்தமான 9 நிறுவனங்களின் இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் சோ நியமிக்கப்பட்டார். இதில் மதுபான நிறுவனங்கள் மூன்றும் அடங்கும். ஜெயலலிதாவும் சோவும் பார்ப்பனர்கள்தானே? 

முன்பு சொன்னபடி, இந்தியாவின் மிகப்பெரிய சாராய அதிபர் விஜய் மல்லையா பார்ப்பனர்தானே!


சாராயத்தை விட மோசமான போதைகளான கடவுள் ஆலை, மத ஆலை, ஜாதி ஆலை, சாஸ்திர சம்பிரதாய ஆலை நடத்தி இந்தியப் பெண்களின் பல்லாயிரம் ஆண்டு வாழ்வையே பாழாக்கியக் கூட்டம் பார்ப்பனக் கூட்டம்.

12) பிராமணர்கள் விபச்சாரம்  செய்கிறார்களா?

அது கைவந்த கலை. தமிழ் மன்னர்கள் கேடு கெட்டுப் போனதற்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. பெயரைச் சொல்ல வேண்டுமா? ஊரறியுமே!

13) பிராமணர்கள் அரபி அடிமைகளை போல சொந்த மகளையே அல்லது 6 வயது குழந்தையை திருமணம் செய்கிறார்களா?

இந்து மதக் கடவுளர்களின் பிறப்பு வரலாற்றை மனுதர்மத்தில் படித்தால் வாந்தி தான் வரும். சரஸ்வதியைப் படைத்த தகப்பனான பிரம்மன் அவள் அழகில் மயங்கி அவளையே கட்டிண்டான் என்று எழுதியது யார்? பிரம்மன் பார்ப்பானில்லையா?

14) பிராமணர்கள் டாஸ்மாக்கில்  குடித்துவிட்டு ரோட்டில் சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்களா?

அந்தச் சாக்கடையில் விழுந்து கிடப்பவர் கோவிலுக்கு வந்து 5 ரூபாய் உம் தட்டில் பிச்சை போட்டால், அந்தக் காசை வாங்கிக் கொண்டு வெட்கமாக சிரிப்பது நீங்கள் தானே?  

மற்றபடி, குடித்துவிட்டு தெருவில் பொது மக்களிடம் அடிவாங்கிய அய்யர்கள் வீடியோக்கள் அவ்வப்போது வாட்ஸ் ஆப்பில் வருகின்றன.

15) பிராமணர்கள் செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?

தமிழர் வீடுகளில் யாராவது இறந்தால், மந்திரம் கூறிவிட்டு பை நிறைய பொருள்களைச் சுருட்டிக் கொண்டு போவது பார்ப்பனர் இனம் தானே. மக்களின் பிரச்சிகளைகளுக்குப் பரிகாரம் செய்கிறேன் எனக் காலம் காலமாய் ஏழை மக்களிடம் பிடுங்கித் தின்பதும் பார்ப்பனர்கள் தானே. 5 ரூபாய் சில்லறைக் காசு தொடங்கி, இலட்சங்கள் வரை கொள்ளை அடிப்பதும் பூணூல் கூட்டம் தானே? 

16) ஒரு இறைவன் என்ற பெயரில் அவர்கள் தங்கள் கடவுளை ஏற்காத மக்களை குண்டு வைத்து கொல்கிறார்களா?

எதன் பேரால் யார் குண்டு வைத்தாலும் அது தப்பு தான். ஆனால், இந்தியாவில் நடந்த மாலேகான், சம்ஜவ்தா உள்ளிட்ட பல குண்டு வெடிப்புக் குற்றங்களில் தொடர்புடையவர்கள் பார்ப்பனர்கள் என்பது தானே உண்மை. வாஞ்சிநாதன், கோட்சே முதற்கொண்டு, தங்கள் கடவுள்/மதம்/ சாஸ்திரம் /சம்பிரதாயம் உயர்ந்தது. அதை மறுப்பவர்களை கொல்ல வேண்டும் என்பதற்காகவே கொன்றார்கள் பார்ப்பனர்கள்.

17) ஏதாவது பிராமணர்கள்  சதி செய்து மற்றவர்களை கொன்று அரசர் ஆனதாக வரலாறு இருக்கிறதா?

ஆரியரல்லாதவரை உயரவிடாமல் தடுக்கும் சூழ்ச்சி. வாமன அவதாரம்: அதாவது சூழ்ச்சி அவதாரம், வாமனம் என்ற சொல்லுக்கே அயோக்கியத்தனம் என்பதாக அகராதியில் பொருள் காணப்படுகிறது. அதற்கேற்ப வாமன அவதாரம் ஓர் அரசனை மூன்றடி நிலம் கேட்டு அளக்கும்போது பூ உலகம் முழுவதையும் ஓர் அடியாகவும், மேல் உலகம் முழுவதையும் இரண்டாவது அடியாகவும் அளந்து மூன்றாவது அடியை அந்த அரசன் தலையில் வைத்து, அவனை பாதாளத்தில் அழுத்தி விட்டதாகவும், அவதாரக் கதையில் காணப்படுகிறது. இதன் தத்துவம் பார்ப்பான் உயர்வாக வாழ மற்றவர்களை அழித்து ஒழிக்க எந்தவித இழிவான காரியத்தையும், அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்யலாம், செய்யவேண்டும், என்கிற தத்துவம் கொண்டதாகும். இந்த சூழ்ச்சி நடத்தைகளுக்கு ஆதாரம் அய்கோர்ட்டு நடத்தைகளைப் பார்த்தாலே பலவற்றில் விளங்கும். அரசியல் சட்டத்தை பார்த்தாலும் விளங்கும்.

மனுதர்ம ஆட்சி நீடிக்கும் திட்டம்.
பிரகத்திர மௌரியனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த புஷ்யமித்திர சுங்கன் தொடங்கி பல அரசர்களைச் சீரழித்த வரலாறும், கொன்ற வரலாறுகளும் கொட்டிக் கிடக்கின்றன!

18) பிராமணர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?

ஏற்கனவே சொல்லப்பட்ட பதில்களை மீண்டும் படிக்கவும். 

19) பிராமணர்கள் ஜாதிக் கலவரத்தில் ஈடுபடுகிறார்களா?

ஜாதிக் கலவரங்களுக்கு காரணமே பார்ப்பனர்கள்தான். ஜாதியை உருவாக்கியதே அவாள் தானே! அந்த ஜாதி வெறி குறையாமல் பார்த்துக் கொள்வதும், கலவரங்களை உருவாக்கப் பின்புலமாகச் செயல்படுவதும் அவாள் தானே? 

20) மாநில அரசாங்கத்திற்கு எதிராக, தங்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் என்றாவது போராட்டம் நடத்தி இருக்கிறார்களா?

மக்கள் நலனுக்காக என்று அவர்கள் போராடியதில்லை. ஏனெனில், அவர்களுக்கு என்று எந்தப் பிரச்சினையாவது இருந்தால் தானே போராடுவார்கள். அவர்களால் தானே மற்றவர்களுக்குப் பிரச்சினை.

இன்று அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆணைக்கு எதிராக அவர்கள் சு சாமியை வைத்து 'போராடி' வருகிறார்கள். முன்பு, வரதராஜ பெருமாள் கோவிலில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என்பவருக்காகப் போராடாமல், கொலை செய்த சங்கராச்சாரியாருக்காகப் போராடினார்கள். 

21) பிராமணர்களால் ஏதாவது ஜாதிக் கலவரங்கள் தமிழ்நாட்டில் வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறதா?

ஜாதி என்பது பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத/வேத/கடவுளின் நியதி என்பதால் கலவரங்களுக்கும் அவர்கள்தான் பொறுப்பு. ஜாதி, மத விஷத்தை இந்த மண்ணில் விதைக்காமல் இருந்திருந்தால் இந்நாடு எப்போதோ வல்லரசு ஆகியிருக்கும். ஆரியர்களால் தான் இந்த நாடு நாசமாகிப் போனது.

22) இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் பிராமணரல்லாதவர்கள் பாரதத்திற்காக நோபல் பரிசு பெற்று இருக்கிறார்களா?

3 விழுக்காடு பார்ப்பனர்கள், 97 விழுக்காடு இந்தியர்களை இதை விடக் கேவலமாகப் பேச முடியாது. வெகு மக்களைப் படிக்கவே விடாமல், இந்நாட்டின் அறிவு வளர்ச்சியையே தடுத்த கேடு கெட்டவர்கள் யார்? அடிப்படைக் கல்விக்கே இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோமே பார்ப்பனர்களிடம்!  
இருந்தாலும் சொல்கிறோம். ஹர்கோவிந்த் குரானா, அன்னை தெரசா, அமர்த்தியா சென் போன்றோரெல்லாம் பார்ப்பனரல்லாதார்தான். தெரிந்தே பொய் சொல்லும் கலையில் நோபல் பரிசு கொடுத்தால் மேற்சொன்ன மூன்று பேர் கூட இருக்க மாட்டார்கள். எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தான்!

இந்தக் கேள்விகள் கிடக்கட்டும். பார்ப்பனர்கள் இந்த நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் கொடுமைகளைப் பற்றி நாம் பல ஆண்டுகளாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் உண்டா பார்ப்பனர்களிடம்? பொய், புரளி, சூது, களவு, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம், குரோதம், ஆதிக்க வெறி, அயோக்கியத் தனம், அடிமைப்படுத்தும் குணம் என மனிதர்களிடம் இருக்கத்தகாத கெடு குணங்களின் மொத்தமாகத் தானே இத்தனைக் காலமும் இருந்திருக்கிறார்கள். அதிலிருந்து இப்போது தான் கொஞ்சம் விழித்திருக்கிறோம். அதற்கே இவ்வளவு புலம்பலா பூணூலிஸ்டுகளே?!

No comments:

Post a Comment