Saturday 22 February 2020

தமிழ்நாட்டின் தனிக்கொடியை பறக்க விடுவோம்

தோழர் அண்ணாதுரை சொற்பொழிவு

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது. இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

கோவை ஜில்லா நீதிக்கட்சி மாநாட்டிற்குப்பிறகு அதே இடமாகிய கலைமகள் பெருமன்றில் ஒரு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

திருப்பத்தூர் தோழர் சுபான் பாடல்கள் பாடினார்.

கூட்டத்திற்கு சென்னை 'தாருல் இஸ்லாம்' ஆசிரியர் ஆலிஜனாப் - பா.தாவூத்ஷா பி.ஏ., தலைமை வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

"மாநாட்டில் பல தலைவர்கள் பேசினர். இனி நாம் செய்யவேண்டுவதென்ன? தேர்தலுக்குமுன்பு கூறியது போல் இனியும் காங்கிரஸ் புலி பாயப்போகிறது 16 அடி எனப்பலவாறு காங்கிரசார் பசப்புவர். இழந்த மந்திரி பதவியைப் பெற பகீரதப் பிரயத்தனம் - செய்கின்றனர். அவர்கள் பதவி வகித்த காலத்தில் கனவிலும் இந்த நிலைமை வருமென நினைக்கவில்லை. ஏன்? அவர்கள் பதவியை ராஜிநாமாச் செய்த அக்டோபர் 31-ஆம் தேதியன்று கூட, நாங்கள் மீண்டும் தீபாவளிக்குள் வந்து விடுவோம்; அதுவரை நீங்கள் சாதாரணமாகக் காரியங்களை நடத்திக் கொண்டிருங்கள்.

முக்கியமான பேப்பர்களில் கை வைக்காதீர்கள். அவை களைப் 'பெண்டிங்கில் வையுங்கள்" என செக்ரட்டிரியேட்டில் குமாஸ்தாக்களிடம் கூறி வந்தனர். தீபாவளியும் போயிற்று; 16 மாதம் ஆயிற்று. திரும்பிவருவதாக நம்பிக்கை இல்லை. இன்று ஏன் பதவியை விட்டோம் என்று அவதிப்படு

கின்றனர்.

மழை விட்டும் தூவானம் - விடவில்லை

அன்று இவர்கள் மனம் போன போக்கில் சென்றனர். தமிழர்களுக்குச் செய்த கேடுகள் கொஞ்சமா? சமீபத்தில் சேலத்தில் ஆரிய சமாஜத்தார். செய்யும் கொடுமைகளை விள க்கி இதை சர்க்கார் கவனிக்க வேண்டும், இங்கு இந்து முஸ்லிம் பிணக்கு வரும்போல இருக்கிறதென்ற கருத்துகள் கொண்ட ஒரு கட்டுரையை  ஒருவர் அனுப்பி இருந்தார்.

ஆனால் சமீபத்தில் சவர்க்கார் பேசிய பேச்சுக்கள் போல் ஒரு முஸ்லிம் பேசியிருந்தால் இந்நேரம் நாட்டில் எந்த நிலைமை ஏற்பட்டிருக்கும். இத்தகைய பேச்சுக் களையும், கட்டுரைகளையும் வெளியிடும் பத்திரிகைகளால் இந்து - முஸ்லிம் பிணக்கு உண்டாகாதா? அதனை சர்க்கார் கவனிக்க வேண்டும். மழை விட்டும் இன்னும் தூவானம் விடவில்லை! பத்திரிகைகளைப் பரிசீலனை செய்ய 'இந்து பத்திரிகையின் உதவியாசிரியராயிருந்து ஓய்வு பெற்ற ஒரு பார்ப்பனரை சமீபத்தில் நியமித்துள்ளனர். அவர் கண்களுக்கு தினமணி, மித்திரன், தமிழ்மணி, இந்து போன்ற பத்திரிகைகள் நன்றாக தெரிகிறது. நமது இயக்கப் பத்திரிகைகளின் கதியைக் கேட்க வேண்டுமா?

ஒற்றுமையும் கட்டுப்பாடும் வேண்டும்

நிற்க, சுயராஜ்யம் என்பது ராமராஜ்யம் என்கிறார் காந்தியார். ராமராஜ்யம் என்பது பார்ப்பனராஜ்யம் என ராமாயணம் முதலியன கூறுகின்றன. எனவே சுயராஜ்யம் என்றால் பார்ப்பனராஜ்யம் என்பது விளங்கவில்லையா? 'நூலெனிலே கோல்சாயும்' என்றனர். எனவே மீண்டும் பார்ப்பனராஜ்யம் வந்தால் நாம் வாழ முடியுமா? அதன் கொடுமையைத்தான் சென்ற 2 வருடங்களாகப் பார்த்தோமே! ஜின்னா அவர்கள் கூறுவது போல் நாடு பிரிக்கப்படவேண்டும். நமது திராவிடநாடு திராவிடருக்காக வேண்டும். இதற்காகவே பெரியார் பாடுபடுகிறார். தமிழரனைவரும் ஒன்று சேர்ந்து இதற்காகப் பாடுபடவேண்டும். நம்மில் ஒற்றுமை கட்டுப்பாடு ஊக்கம் வேண்டும். இவ்வாறு கூறினார்.

அடுத்துத் தோழர் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ., ஆற்றிய நீண்ட சொற்பொழிவு வருமாறு:- தோழர்களே! திராவிட நாடு தனியே பிரிக்கப்பட வேண்டுமென இன்று தீர்மானம் நிறைவேற்றினோம். நமது ஆசையை அதோ தொங்கும் படத்தில் பார்க்கலாம். சென்னை முதல் நேப்பாளம் வரை தீட்டப்பட்டிருக்கும் சிவப்பு நிறமுள்ள பகுதியனைத்தும் திராவிட நாடாகும். சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களைக் கொண்டும், சரித்திர ஆராய்ச்சி கொண்டும் பார்த்தால் இத்திராவிட நாடு எக்காலத்திலும் பிறருக்கு அடிமைப்பட்டதாகத் தெரியவில்லை அன்று நாம் திராவிட நாடு திராவிடருக்கே என்ற போது, எதிரிகள் எலிவலை எலிகளுக்கே என்று கூறிக்கேலி செய்தனர். மலையில் பிறந்த சிறிய எலி, பெரிய மொகலாய சாம்ராஜ்யத்தைத் துளைத்தது' என்று சிவாஜியைப் பற்றிக் கூறுவதுண்டு. அதுபோல அன்று ஈரோட்டில் கிளப்பிய முழக்கம் இன்று லாகூர் வரை சென்று ஒலிக்கிறது! அன்று கிண்டல் செய்தவர்கள் இன்று கிலியடைகின்றனர்.

வார்தா திட்டம் வராது

நாம் பதவியை இழந்திருந்தாலும் நம்மில் பல பிளவு இருந்தாலும் நாம் கிளப்பும் கிளர்ச்சி ஒரு காலத்தில் அகில இந்தியாவிலும் பரவி புகழ் பெறும். ஏன்? இரட்டையாட்சி பசையற்றது, கவைக்குதவாதது என்று பிற மாகாணத்தார் கூறிய காலையில், சென்னை அதனை வரவேற்றது. அவ்வாட்சியாலும் கூடிய நன்மைகளை மக்களுக்குச் செய்யலாம் என்பதை ஜஸ்டிஸ் கட்சி எல்லா இந்தியாவுக்கும் எடுத்து விளக்கியது. வந்தேமாதரக் கிளர்ச்சி முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது. வந்தேமாதரத்தை நீக்கு என முஸ்லிம்கள் கேட்கவில்லை; ஜின்னா கேட்கவில்லை; பெரியார் கேட்கிறாரே!' என அன்று ஆச்சாரியார் கூறினார். மேலும் 35 ஆண்டுகளாகப் பாடிவந்த வந்தேமாதரத்தை நிறுத்த முடியாது. காந்தியையோ, தேசத்தையோ வேண்டுமானாலும் இழப்போம் வந்தேமாதாரத்தை விடமுடியாது என ஆச்சாரியார் சொன்னார். பிறகு அவ்வந்தேமாதரம் பாடுதல் நிறுத்தப்பட்டது. அது பீர்பூர் ராஜா அறிக்கையில் இடம் பெற்றது, அதைப்பற்றி ஜின்னா பேசும் அளவுக்குக் கூடவந்துவிட்டது. 8 மாகாணத்தை கட்டி ஆண்ட ஆணவத்தால் நாம் தொடங்கிய எதிர்ப்புக் கிளர்ச்சி வெற்றிபெறுமா? என்று காங்கிரசார் கேட்டனர். இன்று கட்டாய இந்தி எடுபட்டாதா? இல்லையா? முதன் முதலில் வார்தாத் திட்டத்தைக் கண்டித்தது நாம். இன்று ஜின்னா அதைக் கண்டிக்கிறார். இனி காங்கிரஸ் ஆட்சி வந்தால் கூட வார்தா திட்டம் வராது.

திராவிட நாடு தனியேயிருந்தது

எனவே வெற்றியடைய த் தமிழர் கூறும் - வீரக்கூக்குரல் ''தமிழ்நாடு தமிழருக்கே" என்பது. காரணமென்ன?... நாகரிகத்திலோ, பிறவற்றிலோ நம்மோடு ஒற்றுடையவரல்ல ஆரியர் என சரித்திரம் கூறுகிறது. அவர்களுடைய உருவம், உணர்ச்சி உணவு, நடை, உடை, பாவனை வேறு; நம்முடையன எல்லாம் அவைகட்கு முற்றிலும்மாறுபட்டன. எனவே எல்லாவற்றிலும் மாறுபட்ட வேறு வேறு மக்கள் நிறைந்த ஒரு நாட்டை, கண்டத்தை ஒன்றாய்ச் சேர்த்துக் கொண்டு அவை களை தனித்தனி நாடாகப் பிரிக்கக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? சிந்து நதிக்கரை வரை ஜெயித்து வந்த அலெக்சாந்தர் மேலே செல்ல நினைத்த காலத்தில் நீங்கள் வடநாட்டைத்தான் ஜெயிக்க முடியும்; உங்களைப் போன்ற ஆற்றல் படைத்த வர்கள் தென்னாட்டிலிருக்கிறார்கள்" எனக் கிரேக்க வீரர்கள் சொன்னவுடன் மேலே வராது திரும்பிச் சென்றுவிட்டார். சமுத்திரகுப்தன் கூடக் கலிங்கத்தின் ஓரம் வரைதான் வந்தான். மேலே வரமுடியவில்லை நர்மதையைக் கடந்து, அன்று தக்காளியையோ,  ஆரஞ்சுப்பழ ரசத்தையோ நம்பிக் கொண்டு ஆட்சி நடத்தவில்லை, தமிழர்கள் தக்க பாது காவல் செய்திருந்தனர். தமிழ் நாட்டிற்கு தனிச்சிறப்புடன் தமிழ்நாடு தன்னரசு செலுத்தியிருந்திருக்க வேண்டும். இல்லையேல் தொல்காப்பியமோ, சிலப்பதிகாரம், மணி மேகலை போன்ற பழந்தமிழ் நூல்களோ பிறந்திருக்க முடியாது. பண்டைக் காலச்சிற்பம், இசை, கலை, நாகரிகம், உணர்ச்சி எதைப் பார்த்தாலும் திராவிட நாடு தனித்திருந்த தாகத்தான் தெரிகிறது. அன்று ஆண்டவர் நாம் இன்று ஆண்டியானோம். இன்று இழந்ததைக்கொடு என்று கேட்கிறோம். இனி திராவிட நாட்டில் பார்ப்பனீயத்திற்கோ வைதீகத்திற்கோ இடமில்லை என்று கூறுகிறோம்.

(தொடரும்)

- விடுதலை: 11.4.1940


தமிழ்நாட்டின் தனிக்கொடியை பறக்க விடுவோம் தோழர் அண்ணாதுரை சொற்பொழிவு

வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

31.1.2020 அன்றைய தொடர்ச்சி...

அன்று மூவரசர் புகழுடன் ஆண்டனர். நக்கீரரும் கபிலரும் வள்ளுவரும் தோன்றினர். தமிழகத்தின் புகழ் உரோமாபுரி வரை  - கிரேக்க ராஜ்யம் வரை பரவியிருந்தது. இது சரித்திரங்கள் கண்ட உண்மை. எனவே அன்று ஆரியர் அபகரித்துக்கொண்டதை இன்று திருப்பிக்கொடு என்கி றோம். பாகப்பிரிவினை வழக்குத்தொடுக்க நமக்குச் சகல உரிமையும் இருக்கி றது. பிரிட்டிஷ் துப்பாக்கியாலும் பார்ப் பனீயக் கட்டா லும் நிலைபெற்றுள்ள நமது அடிமைத்தனம் ஒழிந்தால் தமிழ்நாடு தமிழருக்காகும்.

இதைக்கேட்க வெட்கமில்லையா?

தமிழன் பர்மாவிலும், பம்பாயிலும் மலாயாவிலும் சென்று, கூலி வாழ்வு, பஞ்சைப்பனாதி வாழ்வு வாழ் கிறான். ஆனால் தமிழ்நாட்டில் வடநாட்டான் முதலாளி யாய், வியாபாரியாய், அதிகாரியாய், தலைவனாய் வாழுகிறான். தாயை வெட்டுவதா? என்கிறார்கள். உண்மையாக 40 கோடி மக்க ளும் பாரதத் தாயின் மக்களானால் அவர்களுக்குள் உயர்வு தாழ்வு ஏன்? கான்பூர். சுக்கூர் கலவரங்கள் உண்டாவானேன்? 8 கோடி மக்கள் கல்வியிலாது மனிதத் தன்மையிலாது மாட்டிலும் மலத்திலும் கேடாக மதிக்கப்பட்டு, நடத்தப் பட்டு வருகின்றனரே. இந்தக்கொடுமை நடக்கக்காணும் பாரதத் தாயையா 40 கோடி மக்களைப்பெற்ற தாய் என்பது! மலடி யென்று அன்றோ கூறல் வேண்டும்.

கங்கை, காவிரி வற்றாது ஓடும் எங்கள் நாட்டில் எனக்கவி பாடலாம். யாகம் யோகம் அவதாரங்கள் மலிந்திருந்த காலத் தில் தான், கத்தியும் கண்ணாடியும் சீப்பும் சோப்பும் வைத் திருந்த சாதாரண வெள்ளையன் இந்நாட்டைப் பிடித்தான். வெட்கமில்லையா இதைக் கேட்க. அன்று மகாராட்டிரர் களும், ராஜபுத்திரர்களும், படையாட்சிகளும் இருந்தனரே. சிறப்புடன் வாழ்ந்தனரே. செங்கோல் செலுத்தினரே. இன்று எங்கே சென்றனர்? அன்று பல பிளவுள்ள மக்கள் இருந்த தால் தான், ஒன்றுக்கும் உபயோகமில்லையென ஆங்கிலேய ரால் வெறுக்கப்பட்ட வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ள நினைத்த சாதாரண கிளைவுக்கு நாடு காட்டிக் கொடுக்கப்பட்டது.

அன்றழுதது கேட்கவில்லையா?

இந்தியாவில் 574 சுதேச சமஸ்தானங்கள் உள்ளன. இது ஆச்சாரியார் அகராதிப்படி பாரதத்தாயை 574 துண்டு களாக்கிச் சித்திரவதை செய்ததாக, ஆகாதா? என்று கேட்கி றேன். எல்லை காட்டி நமது நாட்டை நமக்கும் இந்திய சர்க் காருக்கும் தொடர்பில்லாது சிலோனைப்போல பர்மாவைப் போல இங்கிலாந்துடன் சம்பந்தம் இருக்கட்டும் என்கிறோம்.

பாரதமாதாவின் புருவம் போன்றது. நேபாளம். அது சென்ற - 6,7 நூற்றாண்டாகத் தனியாக இருக்கிறதே. பாரத மாதாவின் புருவம் வெட்டப்பட்டதோ - அன்று பாரதமாதா அழுதது இவர்கள் காதில் கேட்க வில்லையா?

புதுச்சேரி, காரைக்கால், சந்திரநாகூர் ஆகியவை தனியே பிரஞ்சுக்காரர் வசம் இருக்கிறதே. இதற்காக வெள்ளையன் வெட்கப்பட்டானா? ஆச்சாரியார் அல றி £ரா? அன் றெல்லாம் இதனை யார் கேட்டார்கள்? மேலும் கோவா, டையூ, டாமன் முதலியன போர்ச்சுகீசியர் ஆளுகையில் உள்ளனவே; இவைகளெல்லாம், 'பாரதத்தாயைத் துண்டித்த தாகாதா? திராவிட நாடு பிரிக்கப்பட்டால் தானா தாயை வெட்டுவது போல் - தேசீயத்தோழர்களுக்குத் தோன்றுகிறது. திராவிட நாடு என்றும் தனித்தே இருந்து வந்தது என்ற சரித்திரம் தெரிந்தவர் எப்படி காங்கிரஸ்காரர் பேச்சை ஒப்ப முடியும்? எங்களுக்கும், மற்ற வகுப்பார்களுக்கும் உள்ள பேதங்களை ஆங்கிலேயரோ, பார்ப்பனரோ நீக்க இதுவரை முயற்சித்தார்களா? 150 வருட ஆங்கில ஆட்சியும், 15 வருட காந்தீயமும் இதற்கு என்ன மார்க்கம் காட்டிற்று? இந்து முஸ்லிம் ஒற்றுமையை உண்டாக்கினரா? மகாத்மா, படேல் பஜாஜ்களால் பலநாள் முயன்றும் முடியாத ஒற்றுமையை சேர்க்க முடியாத நாட்டை ஒன்று சேர்ப்பது எந்த விதம்? நாட்டைத் துண்டாக்கிவிட்டால் அன்னியன் எளிதில் பிடித்து விடுவான் என்கின்றார்கள். இத்தாலி, அபிசீனியாவை விட பெரிய நாடா? ஜப்பான், சீனாவை விடப் பரந்த தேசமா? இங்கிலாந்து, இந்தியாவைவிடப் பெரிய நாடா? அபிசீனியாவும் சீனாவும் இந்தியாவும் ஏன் அவை களிடம் திண்டாடுகின்றன?

சிறிய பின்லாந்து எப்படி பெரிய ரஷ்யாவுடன் பல நாள் போரில் - சமாளித்தது. ஜெர்மனி எப்படி அய்ரோப்பாவையே ஆட்டுகிறது? காரணம் விஞ்ஞானமல்லவா?

ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரந்த தன்மையால் இல்லை. அம்மக்களின் போர்த்திறன், பயிற்சி, விஞ்ஞான வளர்ச்சி, அதன் மூலம் அமைக்கப்படும் ராணு வம் இவை களினால் தான், பாதுகாப்பு உண்டாகும்.

ஆரியருக்கும் நமக்கும் வேற்றுமை அநேகம்

குஜராத், இந்துஸ்தான், ராஜபுதனம் மூன்றும் சேர்ந்த ஆரியர் வர்க்கம் அதோ நடுவில் மஞ்சள் வர்ணத்தால் காட்டப்பெற்றிருக்கிறது. படத்தில் அவ்வாரியர்கள், பூலோ கத்தை ஆதிசேஷன் தாங்குவதாகக் கூறி வாழட்டும். ஆனால் நாம் அதை நம்போம். நாம் நான்கு வருணம் கூடா தென்கிறோம். எனவே அவர்களுடன் நாம் ஒன்று பட்ட வர்களல்ல. நாம் கடவுள் உருவமில்லா தவர் என்கிறோம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நமது மறை. அவர்களோ கடவுள் பல அவதாரங்கள் எடுத்தார் என்றும், அவருக்கு மனைவி, மக்கள், கூத்தி, கேளிக்கை உண்டென் றும் நம்புகிறவர் கள். அத்தகையவர் தங்கியுள்ள ஆரிய வர்த்தத்துடன் நாம் சேர்ந்திருக்க முடியாது. அவர்கட்கும் நமக்கும் மதத்தில் வேற்றுமை. அரசியலில் வேற்றுமை. அவர்கள் கவுடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தை அரசியலில் அனுசரிப்பார்கள். அது, எதிரியைக் கொல்ல, பட்டத்திற்கு வர எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுகிறது. விற்பனை வரி போடலாம் என்கிறது. அதனால் தான் ஆச்சாரியார் விற்பனை வரிபோட்டார் போலும்!

ஆனால் நமது திருக்குறள் அரசியலில் சகோதரத்து வத்தையும் சுதந்திரத்தையும், ஒழுக்கத்தையும் கூறு கிறது. ஆரியம் ஏகாதிபத்தியம் - எதேச்சாதிகாரத்தை விரும்புகிறது.

இனி, நமது நாட்டுப் பணம் நம்மிடையே நிற்ப தில்லை. பம்பாயில் 4-அடுக்கு மாளிகை தமிழனுக் குண்டா? சென்னை தங்கசாலைத் தெருவில் சென்று பாருங்கள். குஜராத்திகள் 4-அடுக்கு மாளிகையில் வாழ்கின்றனர்; தமிழன் வடநாடு சென்றால் தினம் 6 அணா கூலிக்கு அவ திப்பட்டு ரத்தம் சிந்துகிறான். இங்கு வந்த வடநாட்டார்கள் நமக்குத் தலைவர்களாய், குபேரர்களாய் மிளிர்கிறார்கள். இதைத் தடுக்கா விட்டால் வெள்ளையன் பிடிவிட்டதும் வட நாட்டானி டம் நாம் அடிமையாவோம்.

இந்த ஆரிய வர்த்தத்தின் ஆட்கள் கையிலேயே காங் கிரசும் இருக்கிறது. பிற இடங்களிலுள்ள போஸ், காரே நரி மன் நசுக்கப்பட்டனர். ஒரு ஜீவானந்தம், ஒரு முத்துராம லிங்கத் தேவர் கதி என்னாயிற்று? காங்கிரசி லிருந்து விடு படக் கருதினால் இந்த ஆரியர் வர்த்த ஆட்களிடமிருந்து விடுபட வேண்டும்.

பிரிந்தால் தான் பெருமை ஏற்படும்

கிரீஸ் ஒரு காலத்தில் உலகம் பூராவும் நாகரீகத்தை யும், கலையையும் பரப்பியது. அங்கு தான் சாக்ரடீஸ் தோன்றி உண்மை அழகு, மறுவுலகம் என்பவை யாவை எனக் கேள்வியை எழுப்பி மக்கள் மனோ நிலையை வளர்த்தார். அப்பொழுது தான் கிரீஸ் நாட்டுப் புகழ் ஓங்கியது. பின்னர் கிரீஸ், பிறநாடுகளின்  மீது ஆசை கொண்ட காலையில் தான் ஒழிந்தது . ஜூலியஸ் சீசரால் ரோம் புகழ்பெற்றது.

பக்கத்து நாடுகளின் மீது நாட்டம் செலுத்திய காலத்துத் தான் ரோம் ராஜ்யம் வீழ்ந்தது. ரஷ்யாவை நீக்கிவிட்டால் அய்ரோப்பாவும், இந்தியாவும் ஒரே அளவுள்ளனவாயி ருக்கும். அய்ரோப்பா ஒரு தேசமல்ல. ஒரு காலத்தில் ஹோலி ரோமன் எம்பயர், என்ற ராமராஜ்ய ஆட்சியின் கீழ் ஒன்றாயிருந்ததால்  ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம், ஸ்பெயின் எனக்கேள்விப்பட்டிருக்க முடியாது போயிருக் கும். இன்று தோன்றியுள்ள பல அரசியல் தலைவர்களைப் பெற்றிருக்க முடியாது. கரிபால்டி, மாஜினி, ரூசோ, வால்ட்டேர் முதலியவர்கள் தோன்றியிருக்கமாட்டார் கள். மக்கள் பிரிந்த பிறகுதான் நாட்டு நிலைக்கு தகுந்த வாறு கீர்த்தி பெருமை ஏற்பட்து. யூகோஸ்லேவேக்கியா, ஸ்விட்சர்லாந்து முதலிய சிறியநாடுகளிலிருந்து சிறந்த பொருள்கள் கடிகாரம் போன் றன நம் நாட்டில் வந்து விலையாகின்றன. அய்ரோப்பா ஒரே நாடல்ல: 32 நாடுகள் கொண்ட ஒரு கண்டம். அங்கு லித்வினியா போன்ற மிகச் சிறிய நாடுகள் அனுபவம் பெற்று தமக்கெனத் தனியே விமானப் படை, கப்பற்படை கட்டி நாட்டைக்காத்துக் கொள்கின்றன. திராவிட நாடு தனியானால் தன்னைத் தான் காத்துக்கொள்ள நிச்சயம் திறம் உண்டு.

ஜின்னாவின் சமூகம் வீர இஸ்லாமிய பரம்பரையினர் மேலே அதாவது பச்சை வர்ணம் தீட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து விட்டால் எதிரி உள்ளே இந்தியா விற்குள் வரமுடியுமா? தெற்கே வித்தியமலையில் நாம் ஒரு மாக்னாட் அரண் அமைத்து விடுவோம். திராவிடரும் முஸ்லிமும் இரண்டு பக்கத்திலும் நெருக்க ஆரம்பித்தால் நடுவிலுள்ள ஆரியவர்த்தத்தின் கதியென்ன? இதை நாம் எண்ண வில்லை. இதை ஆச்சாரியார் உணருகிறார். எனவே தான் இந்தியா பிரிக்கப்பட்டால் ஆரியம் அழியுமே என அஞ்சு கிறார். தனித்தமிழ் நாடு கிடைத்து விட்டால் தமிழன் கை ராட்டையையோ, தகளியையோ நம்பான் என எண்ணி, நலிகிறார்.

நாம் ஏன் பிரிவினை விரும்புகிறோம்

இனி தமிழன் கலிங்கத்துப் பரணியை எண்ணி சிலப்பதி காரத்தை, நாயக மன்னரை மறவர் படை யாட்சியர் வீரத்தை எண்ணி ஆளுவான். தமிழ் நாட் டை யாராலும் பிடிக்க முடியாது. நாம் பிறர்க்கடிமையில்லாது சுதந்திரமாக வாழத் தான் பிரிவினையை விரும்புறோம் இல்லையெனக் கூற முடியாது. ... வாரன் ஹேஸ்டிக் காலத்தில் கட்டியாள வசதி யாயிருக்கும் பொருட்டு இந்தியா அரசியலில் ஒரு நாடாக இணைக்கப்பட் டது. இதனை சரித்திர ஆசிரியர்களே கூறியுள்ளார்கள். பிரித்துவிட்டால் நமக்கு ஆபத்து என்று பிரிட்டிஷாரும் நினைக்கலாம். பிரி என்றால் வெள்ளையர் கோபம் கொள்ளலாம். ஆரியர் அலற லாம், அவர்கள் அலறலுக்காக ஆரிய ஆழ்கடலுள் வீழ்ந்த நாம் சும்மாயிருக்க முடியுமா?

சில எதிரிகள் முஸ்லிம்களைத் தூண்டிவிட அப்படி நாடு பிரிக்கப்பட்டால் தஞ்சாவூர் முஸ்லிம் பஞ்சாபுக்குப் போக வேண்டும் என்கின்றனர். முஸ்லிம் களை ஒரு காலத்தும் நாங்கள் போக விடமாட்டோம். ஆண்டவன் பூஜைக்கு ஆபாச மேளமடிக்கும் வழக்கமெங்களுக்கில்லை; எனவே, முஸ்லிம்களுக்கும் எங்களுக்கும் மதச்சண்டை உண்டாகாது, முஸ்லிம் இடையேயும் சாதிபேதமில்லை. எங்களிடையேயும் சாதிபேதமில்லை. நாங்கள் இருவரும் வீரத்தை, வெற் றியை, உண்மையை, ஒழுக்தத்தை விரும்புகிறவர்கள் இங்குள்ள முஸ்லிம்களை நாங்கள் ஆதரிப்போம். பஞ்சாபிலுள்ள திராவிடரை சிக்கந்தர் காப்பாற்றுவார். ஆரியனுக்குத்தான் ஆபத்து. அத்திராவிட ஆட்சியில் உச்சிக் குடுமியும், நாமமும் பிறவும் துலங்க இருக்கலாம். ஆனால் அவைகளை வணங்கினால் உனக்கு மோட்சம் என்று ஆரியன் இன்று அளந்து தமிழனை ஏமாளியாக்குகிறானே .அது நடக்காது. நெருப்பு ஆற்றின் மீது மயிர்ப்பாலம் இருக்கும் கதையை அளக்க முடியாது. எனவே ஆரியனுக்கும் நமக்கும் பேரம் உண்டே ஒழிய முஸ்லீமுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை.

நாம் ஏன் முயலக்கூடாது

இதனால் தான் நாடு பிரிக்கும் எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பதை புத்திசாலிகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என சர்.சண்முகம் கூறினார். அன்று இந் திக்காகப் பலரை சிறைக்கனுப்பியது ஆச்சாரியாராட்சி. 27 மாதம் நாம் பட்ட கஷ்டம் போதும். இனியும் எதிர்காலம் இப்படியே இருக்குமானால் பெரியார் கூறியது போல நாட்டில் ரத்த ஆறுகள் ஓடும், என் று. அய்ரோப்பாவில் சண்டை பிரிட்டன் ஒரு ஏக்கர் நிலத்துக்கோ, தங்கக்சுரங்கத்துக்கோ சண்டை போட வில்லை. பிற நாட்டின் மீது ஒரு நாட்டு கலையை, முறையை திணிப்பதைத் தடுக்கத்தான் போர். அதல சுதல பாதாள லோகங்களைப்பற்றி ஆரியன் பேசலாம். அங்கு போவதானாலும் போகலாம். ஆனால் அங்கு போகலாம் வா, என திராவிடனை அழைக்க முடியாது. அந்தக் கட்டுக்கதைக்கு தமிழன் இரையாக மாட்டான். பிரிட்டன் சும்மா செல்லவில்லை ஒரு நாட்டு அரசியல் முறையோ, மொழியோ, பிறவோ அந்தநாட்டுக்கே உரிமையானது. அதை அழிக்கக் கூடாது; பிறர்பறிக்கக் கூடாது என்பதற் காகவேதான் பிணக்குவியலாக ரத்த ஆறு ஓட்டி தங்கள்  மொழி, கலை முதலியவைகளை சிறு நாட்டினர் கூட பாது காத்துக் கொள்கின்றனர் என்றால் நாம் ஏன் நம்மைப் பாது காத்துக் கொள்ள முயலலாகாது? நம்மிடம் குண்டுகளில்லை; ஆனால் மனவுறுதியுண்டு. ஹிட்லர் குணங்களில்லாது நம் மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பெரியார் உண்டு.

கிண்டல் செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு விகடன், ஜின்னாவை பாதுஷாவாக படம் போட்டு, அவர் எதிரிலே, பெரியார், கத்தியோடு நிற்பதாகக் காட்சி வரைந் துள்ளது. அது. வெறும் கிண்டலாகப் போய்விடாது! ஒரு காலம் வரத்தான் போகிறது. ஜனாப் ஜின்னா, முஸ்லிம் நாட்டை ஆளத்தான் போகிறார், பாதுஷாவாகவல்ல, பிரியமான தலைவராக. அச்சமயத் தில் திராவிட நாட்டைத் திரா விடருக்கென, இதனால் தான் துண்டித்தேன் என பெரியார். ஜின்னாவிடம் தமிழர் வெற்றி  என்ற கத்தியைக் காட்டத்தான் போகிறார். படம் ஆரியருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் - புகட்டப் போகிறது.

வெட்டு ஒன்று துண்டு எத்தனை என்று விகடன் கேட்கிறான். ஒரே வெட்டில் 3 கேடுகளைத் துண்டித்து எறிவோம். ஒன்று பார்ப்பனீயம், இரண்டாவது ஏகாதிபத்தியம் மூன்றாவது மூடப்பழக்கம். இவை மூன் றும் ஒழிய வேண்டும்.

- விடுதலை: 11.4.1940

- விடுதலை: 31.1.20,3.2.20

No comments:

Post a Comment