Wednesday 5 February 2020

அம்பேத்கர் என்பது Dr.அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் அல்ல

🙏🙏🙏🙏🙏🙏🙏
வரலாற்று உண்மை
✍✍✍✍✍✍✍
SCALM :அம்பேத்கர் என்பது Dr.#அம்பேத்கரின் ஆசிரியர் பெயர் அல்ல
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 அது அவரின் #இயற்பெயரே
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
அம்பேத்கர் இயற்பெயர் ; பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
அம்பேத்கர் தந்தை பெயர்; ராம்ஜி மாலோஜி அம்பேத்கர்.

அம்பேத்கர் தபோலியில் உள்ள A.J. உயர்நிலைப்பள்ளியில் முதலில் பயின்றார்.அது இராணுவ வீரர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளி.அம்பேத்கரின் தந்தை ஓய்வு பெற்ற சுபேதார் என்பதால் அம்பேத்கருக்கு அப்பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு அம்பேத்கர் மராத்தி மொழியை மோடி எழுத்து வடிவில் பயின்றுள்ளார்.தானே கையொப்பமிடவும் கற்றுள்ளார். பின்னாலில் மராத்தி மொழி தேவநகரி எழுத்து வடிவத்தில் மாறியுள்ளது.

பணியின் காரணமாக அம்பேத்கரின் குடும்பம் சதாராவிற்கு குடிபெயர்கிறது, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அம்பேத்கர் திரும்பவும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். அங்கு தான் அம்பேத்கர் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டுள்ளார். அங்குள்ள ஆசிரியர் பெயர் தான் அம்பேத்கர் என்று பொய் கூறப்படுகிறது. அம்பேத்கர் அந்த பள்ளியில் சேர்ந்த அன்றே பள்ளி பதிவேட்டில் பீவா ராம்ஜி அம்பேத்கர் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் சேர்ந்த அன்றே அம்பேத்கர் பீவா ராம்ஜி ஆம்பேட்கர் என்று மராத்தி மொழியில் மோடி ஸ்கிருப்டில் கையெழுத்திட்டுள்ளார். அந்த பதிவேடு இன்றும் அம்பேத்கர் படித்த பள்ளிக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கையெழுத்தில் உள்ள அம்பேத்கர் கையெழுத்தை தமிழக அரசுச் செயலாளராக பணியாற்றிய மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற IAS அதிகாரி விஷ்வநாத் ஷெகாவ்கர் என்பவர் உறுதி செய்துள்ளார். 

எனவே அம்பேத்கர் என்பது ஆசிரியரின் பெயரல்ல. அது அவரின் இயற்பெயர் என்பது உறுதியாகிறது.

1916 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு அம்பேத்கர்   பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தனது இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் தனது தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்றும் தன் கைப்பட எழுதியுள்ளார். அதற்கான ஆதாரமும் உள்ளது.

மேலும் அம்பேத்கரின் தந்தை ஆங்கிலேயருக்கு அனுப்பிய கடிதங்களில் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்று கையெழுத்திட்டுள்ளார். அந்தக் கடிதங்களை தன் தந்தையின் பீரோவீலிருந்த பழைய காகிதக் கட்டுகளிலிருந்து கண்டெடுத்ததாக பிற்காலத்தில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

ஆகவே அம்பேத்கர் எனும் பெயர் அவரின் தந்தை பெயரிலிருந்தே புரட்சியாளர் அம்பேத்கருக்கு வந்துள்ளதே தவிர அது எந்த ஆசிரியர் பெரும் அல்ல.

இந்தியாவின் அறிவாளிகள் பார்ப்பனர்களாகவோ அல்லது பார்ப்பனர்களால் பயன்பெற்றவர்களாக இருப்பர் என்ற மோசடிகளின் அடிப்படையில் அம்பேத்கர் என்பது அவரின் ஆசிரியர் பெயர் என்று பொய் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

 அம்பேத்கர் என்பது அவர் இயற்பெயரே என்பதை ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளேன். இந்த பதிவும் மேலும் பல குறிப்புகளும் *அம்பேத்கர் என்ற பெயர் ஒரு பார்ப்பனருடையதா? - கழுவப்படும் பெயரழுக்கு எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. புத்தகத்தின் ஆசிரியர் பெயர் யாக்கன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment