Monday 30 October 2017

வங்கியில் அதிகாரி பதவிகளுக்கான முதன்மைத்தேர்வு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்


சென்னை, அக். 29-- வங்கிகளில், அதிகாரி பதவிகளுக்கான தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலசங்கம், எம்பவர் அறக்கட்டளை மற்றும் பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமியுடன் இணைந்து, சென்னையில் நான்கு நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உள்ளது.

பயிற்சி வகுப்புகள், சென்னை, வேப்பேரி ஈ.வெ.கி. சம்பத் சாலையில் உள்ள பெரியார் திடலில் நவம்பர் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவினர்,  வங்கிதேர்வு ஆணையத்திற்கு  அனுப்பிய விண்ணப்பத்தின் நகலை, empower.socialjustice@gmail.com   என்ற மின் அஞ்சலுக்கு அல்லது அஞ்சல் மூலம் பொதுச்செயலாளர், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச்சங்கம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, 139, பிராட்வேசாலை, சென்னை-600108 என்ற முகவரிக்கு நவம்பர் 6-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, செல்பேசி எண்கள்9381007998, 9092881663 ஆகிய செல்பேசி எண்களில் அல்லதுempower.socialjustice@gmail.com,periyariasacademy@gmail.com--க்கு தொடர்பு கொள்ளவும்.

பயிற்சி வகுப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே உள்ளதால், முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என யூனியன் பாங்க்

ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்க பொதுச் செயலாளர் 
ஞா.மலர்கொடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment