Monday 30 October 2017

நாம் இந்து மதத்தை வெறுக்க வேண்டும்? ஏனெனில்...


1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது

2) அதுதான் என்னை சூத்திரன் என்றது

3) அதுதான் என்னை வேசிமகன் என்றது

4) அதுதான் என் தாயை வேசி என்றது

5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது

6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது

7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது

8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது

9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது

10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது

11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது

12) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது

13) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது

14) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது

15) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது

16) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது

17) அதுதான் நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது

18) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது

19) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது

20) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது

21) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது

22) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது

23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது

24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது

25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது

26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது

27) அதுதான் என் பாட்டனை முடி வளர்க்காதே என்றது

28) அதுதான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது

29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது

30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது

31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது

32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது

33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது

34) அதுதான் அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப்போக்கியது

35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது

36) அதுதான் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது

37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது

38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது

39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது

40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது

41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது

42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது

43) அதுதான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது

44) அதுதான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது

45) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது

46) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது

47) அதுதான் எனக்கு ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது

48) அதுதான் என்னை ஒட்டலில் பெஞ்சில் அமராதே என்றது

49) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது

50) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது

51) அதுதான் சூத்திரன் ஆளும் நாடு சேற்றில் மூழ்கிய  பசுப்போல அழிந்துவிடும் என்றது

52) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது

53) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது

54) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது

55) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது

56) அதுதான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது

57) அதுதான் என்னை பார்ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது.

58) அதுதான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்கு. பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை

அடித்தால் போதும் என்றது.

59) அதுதான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது

60) அதுதான் பெண்களை ஆணின் உடைமை என்றது

61) அதுதான் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றது

62) அதுதான் ஆணுக்குப் பெண் அடிமை என்றது

63) அதுதான் பெண்களைப் படிக்காதே என்றது

64) அதுதான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது

65) அதுதான் பெண்ணை விதவை என்று ஆக்கி கொடுமைப்படுத்தியது

66) அதுதான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது

67) அதுதான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது

68) அதுதான் வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றது

69) அதுதான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது

70) அதுதான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது

71) அதுதான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது

72) அதுதான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது

73) அதுதான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது

74) அதுதான் பறையனும் பிணமும் ஒன்று என்றது

75) அதுதான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது

76) அதுதான் பிணத்தைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது

77) அதுதான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது

78) அதுதான் சாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது

79) அதுதான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது

80) அதுதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது

81) அதுதான் சாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது

82) அதுதான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது

83) அதுதான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது

84) அதுதான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது

85) அதுதான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது

86) அதுதான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக்கொள்ளலாம் என்றது

87) அதுதான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கல்யாணம், கருமாதி, திதி, தெவசம், கோயில்

திருவிழா, தேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது

88) அதுதான் சாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது

89) அதுதான் சாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது

90) அதுதான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது

91) அதுதான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது

92) அதுதான் பார்ப்பானே தெய்வம் என்கிறது

93) அதுதான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது

94) அதுதான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது

95) அதுதான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது

96) அதுதான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது

97) அதுதான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது

98) அதுதான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது

99) அதுதான் நாட்டை சூத்திரன் ஆண்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. இவை அனைத்திற்கும் மனுதர்மத்திலும் இதிகாச புராணங்களிலும் ஆதாரம் உள்ளது. அந்த இந்து மதத்தை நாம் எதிர்க்க இப்படி எத்தனையோ

காரணங்கள் இருக்க நாம் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன்.

இப்படிக்கு:

மானமுள்ள சுயமரியாதைக்காரர்கள், திருவெறும்பூர் 

-விடுதலை ஞாயிறு மலர், 28.10.17

No comments:

Post a Comment