Saturday 2 December 2023

சூத்திரர்கள் வணங்க வேண்டிய கடவுள் எது?


சிற்றிலக்கியங்களில் நீதி நூல்கள் வரிசையில் 230 ஆண்டுகளுக்கு முன் 'குருபாததாசர்' என்பவரால் இயற்றப்பட்ட 'குமரேச சதகம்' என்ற நீதி நூலில், பெண் அடிமைத்தனமும், சூத்திரர்களுக்கான அடிமைத் தன்மையும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

"காதல் உறு கற்பு உடைய மங்கையர் தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் மாதையையினால் சூத்திர் களுக்கு மறையோர் தெய்வம்"

- குமரேச சதகம், பாடல்: 8

பெண்களுக்கு தெய்வம் கணவன் என்றும், சூத்திரர் களுக்கு (தாழ்ந்தவர்) தெய்வம் பார்ப்பனர் (மறையோர்) என்றும் 8ஆவது பாடலில் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல் 10ஆவது பாடலில் பண்புகளைப் பற்றி கூறும் போது

"மிலேச்சருக்கு நிறையது இல்லை

வரு புலையற்கு இரக்கம் இல்லை"

- குமரேச சதகம், பாடல்:10

மிலேச்சருக்கு (இழிந்தவர்) ஒழுக்கம் இல்லை; புலையருக்கு (கீழ் மக்கள்) இரக்கமில்லை என்றும் கூறுகிறது.

பெண்கள் கணவனைத் தான் வணங்க வேண்டும். சூத்திரர்கள் பார்ப்பானைத் தான் வணங்க வேண்டும். நேரடியாக கடவுளை வணங்கக் கூடாது என்றும், பிறப்பின் அடிப்படையிலேயே பண்புகளைக் கூறும். இப்படிப்பட்ட இலக்கிய படைப் புகளுக்கு காரணம் ஆரிய பார்ப்பன கலாச்சார உள்நுழைவே ஆகும். அதாவது ஸநாதன கோட்பாடுகளே ஆகும். ஆரிய ஸநா தன கோட்பாடுகள் தமிழ் இலக்கியங்களில் நிறைந்து உள்ளதால் தான் தந்தை பெரியார் அவர்கள் 'தமிழ் காட்டு மிராண்டி மொழி' என்று சொன்னார். இலக்கியத்தின் செழுமை தான் மொழிக்கு சிறப்பு; இலக்கியம் காட்டுமிராண்டித்தனமாக இராமல் மக்க ளைப் பண்படுத்தும் தன்மையில் அமைய வேண்டும்! அமைக்கப்பட வேண்டும்! 

-செ.ர.பார்த்தசாரதி,  

நுங்கம்பாக்கம் , சென்னை -34


No comments:

Post a Comment