Sunday 26 May 2024

கலைஞர் உலக அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி



Published March 5, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 5- கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொது மக்கள் 6-3-2024 (புதன்கிழமை) முதல் பார்வையிடுவதற்கு அனு மதிக்கப்படுவார்கள் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது. இது தொடர் பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப் பதாவது:-
தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவி டம் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப் பட்டு, 26-2-2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனுடன், கலைஞ ரின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொது மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அந்நினைவிட வளாகத்தில் நில வறையில் நவீன தொழில் நுட்பங் களுடன் பல்வேறு அரங்கங் களுடன் “கலைஞர் உலகம்” என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட் டுள்ளது.

இந்த, கலைஞர் உலகம் அருங் காட்சியகத்தில், கலைஞரின் நிழ லோவியங்கள், உரிமை வீரர் கலை ஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலைஞர் உலக அருங் காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 6-3-2024 (புதன் கிழமை) முதல் அனுமதிக்கப்படும். இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின்  https://www.kalaignarulagam.org/என்ற இணைய முகவரி (Webportal) உருவாக்கப்பட் டுள்ளது.

இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனு மதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கலைஞர் உலகத் திற்கான அனுமதிச் சீட்டு பெறு வதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
ஒருவர் ஒரு அலைபேசி எண் ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப் பட்ட அனுமதிச் சீட்டுடன் வரு பவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடை பெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனு மதிச் சீட்டினைப் பெற்றுக் கொள் ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத் திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார் வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும். கலைஞர் நினைவிடத் திற்கு மரியாதை செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை.
கலைஞரின் பெருமையினைப் பறைசாற்றும் வகையில், நவீன மற்றும் புதுமையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் உலகத் தினைப் பொதுமக்கள் தமிழ்நாடு அரசிற்கும், அங்குப் பணி புரியும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப் பினை நல்கி கண்டு களித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment