Thursday 22 July 2021

மதுரை கோயில் நுழைவும் வைத்தியநாதய்யரும்

 

(ஆலயப்பிரவேசத்தின் முன்னோடி - மதுரை வைத்தியநாதய்யர் என்று ஆர்.எஸ்.எஸ்வார இதழான விஜயபாரதம் நீட்டி முழங்குகிறது உண்மையில் நடந்தது என்னஆலய பிரவேச உரி மைக்கான போராட்டங்கள் வைத்தியநாத அய்யருக்கு முன்பே யாரால் எப்பொழுதெல்லாம் நடத்தப்பட்டு உள்ளன என்பதை விளக்குகிறது இதோ ஆதாரம்)

கி..பெ.விசுவநாதம் தலைமையில் 1927 இல் சுமார் 1000 பேர் அனைத்து ஜாதியினருடன் மயிலாடு துறை மயூரநாதசுவாமி கோயிலில் நுழையச்சென்றனர்நுழைவாயிலையும் கருவறையையும் கோயில் நிர்வாகி கள் பூட்டிவிட்டபோதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று மணிக்கதவம் தாழ் திறவாய்என்ற திருநாவுக்கரசர் பாடலைப் பாடினர். 12.8.1928இல் திரு வானைக்கோயிலிலும் 25.6.1928இல் திருச்சி மலைக் கோயிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன (மங்கள முருகேசனின் "சுயமரியாதை இயக்கம்",

229-230). ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக் குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத் துச் சென்றார்அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்துப் பூட்டப்பட்டனர்அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது (குடிஅரசு, 21.4.1929 : குவெ, 160).

நீதிக்கட்சித் தொண்டர்களும்சுயமரியாதை இயக்கத்தினரும் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டங்கள் இன்றுவரை பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளனஅதற்கு மாறாக, 1939 இல் தமிழக மெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் காங் கிரசைத் தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில்எம்.சிராஜா கொண்டு வந்த கோயில் நுழைவு உரிமை மசோ தாவை ராஜகோபாலாச்சாரி அமைச்சரவை ஒழித்துக் கட்டியிருந்த சமயத்தில்அப்போது நடக்கவிருந்த மதுரைராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றிபெறுவதைக் கருத்தில் கொண்டுமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரக் கடைசிப் பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப் பட்டவருடன் நுழைந்து தேசிய பத்திரிகைகளில் பெரும் ஆரவாரம் * மிக்க அங்கீகாரம்ராஜகோபாலாச் சாரியிலிருந்து காந்திவரைதேசியத் தலைவர்களின் புகழ்ச்சி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டார் பெரியாரால் குள்ள நரிஎன்று அழைக்கப்பட்ட மதுரை .வைத்தி நாதய்யர்தாழ்த்தப்பட்டோருக்குக் கோயில் நுழைவு உரிமை என்பதை 1922 இல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதைத் திரு.வி.வின் வாழ்க்கைக் குறிப்பு'களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்இனாம் குடிகளின் உரிமையையும் இனாம்தாரிஜமீன் தாரி ஒழிப்பையும் எதிர்த்தவரும் இவர்தான்.

 மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோயி லில் வைத்தியநாதய்யர் நடத்திவைத்த 'நுழைவும்கூட அப்போது அக்கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்எஸ்நாயுடு என்னும் நீதிக்கட்சிக்காரரின் அனுமதி யாலும் இசைவின் பேரிலுமே சாத்தியமாயிற்றுதாழ்த் தப்பட்டவர்களை அனுமதித்ததன் காரணமாககரு வறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோயிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான் (குஅ, 16.7.1939 : நகரதூதன், 16.7.1939).

நன்றி:  பெரியார் சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி.ராஜதுரை.கீதா (பக்கம் 550-551)

உண்மை இவ்வாறு இருக்க பார்ப்பனப் பத்திரி கைகள் தொடர்ந்து மதுரையில் நடைபெற்றது தான் முதல் கோயில் நுழைவு என்றும் வைத்தியநாத அய்யர் தான் ஆலய நுழைவின் முன்னோடி என்றும் தொடர்ந்து பேசி வருவது கடைந்தெடுத்த பித்தலாட்டம் அல்லவா?

கோவில் நுழைவை எதிர்த்த வைத்தியநாதய்யர்

திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூடிய போதுநாடார் முதலியோர் கோயில் நுழைவைப் பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானங் கொண்டுவரப்பட்டதுஅவர் பெரும் புயலைக் கிளப்பினார்அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டதுஅதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும்கிருஷ்ண அய்யங் காருமாவர்.                              

   - திரு.வி. வாழ்க்கைக் குறிப்புகள் பக்.644

ஆலயபிரவேசத்தில் சுயமரியாதைக்காரர்கள்

மதுரையில் 30.7.1939 அன்று பேசிய ராஜாஜி கோபாலாச்சாரியார் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"இந்த வெற்றி (மதுரை மீனாட்சி கோவிலில் ஆதி திராவிடர்கள் நுழைந்தமைகாங்கிரசுடையது அல்லஅல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்த வெற்றியுமல்லஇது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும்ஏனெனில் இவ்விஷயத்தில் சுயமரியாதைக்காரர்களும் ஜஸ்டிஸ் காரர்களும் இன்னும் இதரர்களும் சேவை செய்திருக் கின்றனர்என்று குறிப்பிட்டார்.

இச்செய்தி 31.7.1939 நாளிட்ட

'சுதேசமித்திரன்ஏட்டில் வெளியாகி இருந்தது.

(ஆதாரம்விடுதலை 1.8.1939)

No comments:

Post a Comment