Monday 29 April 2019

கோத்ரேஜ் நிறுவன ஊழியர் வ.வசந்தி பணி நிறைவு பாராட்டு!



சென்னை, ஏப்.29 கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் 37 ஆண்டுகள் பணி யாற்றி 11.4.19ல் பணி ஓய்வு பெற்றார்..

அவரை பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி  முன்கூட்டியே 10.4.19 பிற் பகல் 3.30 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர்கள் சார்பிலும், அலுவலர்கள் சார்பிலும் தொழிற் சாலை மேலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. .

கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் த.ரமேஷ், செய லாளர் செ.ர.பார்த்தசாரதி பொருளாளர் க.நாகராஜ் மற்றும் துணைத் தலைவர் கோ.குமாரி  ஆகியோரால் சால்வை அணிவிக்கப்பட்டு, அன்பளிப்புடன் பாராட்டு கேடயமும் வழங்கப்பட்டது. சங்க துணைச் செயலாளர் ம.கருணாநிதி நூல்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தொழிற் சாலை, மனித வள அலுவலர் ஜோசப் மரியதாஸ் இராஜசேகர், சங்க செயற்குழு  உறுப்பினர் பா.இயேசுராஜா மற்றும் தொழிலாளர்களும் அலுவலர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 -  விடுதலை நாளேடு, 29.4.19 

No comments:

Post a Comment