Saturday 6 July 2024

சென்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் மானமிகு புலவர் காவிரிச்செல்வன் விபத்தில் நம்மைவிட்டு மறைந்தார்!


இயக்க வரலாறான தன் வரலாறு(241) : 

உண்மை இதழ்

அய்யாவின் அடிச்சுவட்டில் …

கி.வீரமணி

 25.12.1991 அன்று சென்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் மானமிகு புலவர் காவிரிச்செல்வன் அவர்கள் ஒரு விபத்தில் நம்மைவிட்டு மறைந்தார் என்கிற பேரிடியான செய்தி கேட்டு நாம் திடுக்குற்றோம்.

சீரிய எழுத்தாளர், சிறந்த செயல்வீரர், நேர்மையான பகுத்தறிவாளர், ஒரு நல்லாசிரியர். ஏராளமான பெரியார் பிஞ்சுகளை உருவாக்கிய பகுத்தறிவுப் பண்ணை அவர் என்றால் அது மிகையாகாது. அவர் நம் இயக்கத்திற்கு தோன்றாத் துணையாக இருந்தவர். ஆண்டு தவறாமல் அய்யா விழாவிலும், புரட்சிக்கவிஞர் விழாவிலும், மாணவர்களிடையே அவர்தம் தொண்டு பற்றியும், பகுத்தறிவுச் சுடர் கொளுத்தவும் அவர் முன்னின்று நடத்திய போட்டிகளும், பணிகளும் என்றென்றும் நம்மால் மறக்க இயலாத ஒன்றாகும்.

காவிரிச் செல்வன்

ஒரு சுயமரியாதை வீரனை இழப்பது அவர்கள் குடும்பத்திற்கும், இயக்கத்திற்கும் மாத்திரம் இழப்பு அல்ல; சமுதாயத்திற்கே பெரும் நட்டமாகும் என்று இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டோம்.

No comments:

Post a Comment