Monday 28 February 2022

செம்பரம்பாக்கத்தில் புதிய கிளைக்கழகம் தொடங்கப்பட்டது

ஆவடி - செம்பரம்பாக்கத்தில் புதிய கிளைக்கழகம் தொடங்கப்பட்டது! புதிதாக வந்துள்ள இளைஞர்களை வரவேற்று தீர்மானம்!

ஆவடி, பிப்.  27- ஆவடி மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் புதிய கிளைக்கழகம் தொடங்கப் பட்டது. இதில் மாவட்டப் பொறுப் பாளர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.

பூவிருந்தவல்லியை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் புதிய தோழர்கள் அறிமுகமானதை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், புதிய தோழர்களின் அடிப்படை அய்யங்களுக்கு பதில் கூறுகிற விதத்தில், ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் கலந்துகொண்டு மாண வர்களின் அய்யங்களுக்கு பதில ளித்து சிறப்பித்தார்.

தொடர் அரவணைப்பால் புதிய கிளை உருவானது!

பிறகு தொடர்ந்து அத்தோழர் களுடன் தொலைபேசி உரையா டல்கள் வாயிலாக, இயக்கத்தில் இணைந்து பணிசெய்யும் அவர் களின் விருப்பத்தின் அடிப்படை யில், திராவிடர் கழகத்தின் புதிய கிளை அங்கே தொடங்குவதற்காக கலந்துரையாடல் கூட்டம் ஏற் பாடு செய்ய மாவட்டக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்டது. அதனடிப் படையில், கடந்த ஞாயிறன்று (20.2.-2022) மாலை 5 மணிக்கு, செம் பரம்பாக்கம் சமூகநலக்கூடத்தில், பகுதித் தலைவர் பெரியார் மாணாக் கன் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட அமைப்பா ளர் உடுமலை வடிவேல், செயலா ளர் க. இளவரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் பூவை மு. செல்வி, மணிமாறன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் மு. பசும்பொன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

புதிய கிளைக்கழகத்தின் அமைப்பாளர் நியமனம்!

தொடக்கத்தில் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண் டனர். முன்னதாக மாவட்ட மாண வர் கழகத் தலைவர் செ.பெ. தொண்டறம் கடவுள் மறுப்பு கூறினார். அமைப்பா ளர் உடுமலை வடிவேல் நிகழ்ச்சியின் நோக்க வுரை ஆற்றினார்.

ஆவடி நகரச் செயலா ளர் இ. தமிழ்மணி, மு. பசும்பொன், பூவை மு. செல்வி, மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் க. கார்த்திகேயன்,

தி. மணிமாறன் ஆகியோர் தாங்கள் இயக்கத்திற்கு வந்த அனுபவங்களை புதிய தோழர்களின் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாவட்டத் துணைத்தலைவர் வை.கலையரசன் ஒருங்கிணைத்தார். கவுதம், வல்லரசு, பிரபாகரன், அரிஷ், ரமேஷ் ஆகியோர் புதிதாக கலந்துகொண்டனர். அவர்களில் செம்பரம்பாக்கம் கிளைக்கழகத் திற்கு ஹரிஸ் அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்!

புதிதாக இயக்கத்திற்கு  வந் துள்ள இளைஞர்களை வரவேற் றும், ஒருநாள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் செம்பரம்பாக்கத்தில் நடத்துவதென்றும் இரண்டு தீர் மானங்கள் அனைவரின் ஒப்புத லோடு நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் பூவை இளைஞரணித் தலைவர் சு. வெங்கடேசன், சதீஷ், சரண், இ. ப. இனநலம், செ. அன்புச் செல்வி, ந. வீரமணி, அ. சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப் பித்தனர். இறுதியில் புதிய பொறுப் பேற்றுக்கொண்ட அரிஷ், இந்தப் பகுதியில் பெரியாரின் கொள்கை களை பரப்ப தான் சிறப்பாக பணி யாற்றுவேன் என்று உறுதியேற்றார். தொடர்ந்து அவரே நன்றி கூறி நிகழ்வை முடித்துவைத்தார்

No comments:

Post a Comment