Tuesday 6 February 2018

திராவிடர் ஏன்!

பார்ப்பன இனத்தை ஒதுக்கத்தான் தந்தை பெரியார் 'திராவிடர் கழகம்' என்று பெயர் வைத்தார். 'தமிழ் நாடு, தமிழர், தமிழர் பண்பாடு' என்ற நூலில் ''நான் திராவிடர் என்று சொல்வது தமிழரை தான், 'திராவிட நாடு' என்று சொல்வது தமிழ் நாட்டை தான்'' என்று கூறுகிறார். தமிழர் என்று இயக்கத்திற்கு பெயர் வைப்பதில் தப்பில்லை, அந்த பெயரின் மூலம் ஆரியன் புகுந்து விடக்கூடாது என்பது தான் முக்கியம். அதில் எச்சரிக்கையாய் இருந்தார் பெரியார். பார்ப்பானையும் தமிழன் தான் என சில தமிழ் தேசியவாதிகள் கூறுகின்றனர். இதில் தான் சிக்கலே.

திராவிடர் இனத்தின் மொழியில் வடமொழி குறைவாக கலக்கப்பட்டு பிறகு தூக்கி எறியப்பட்டு தற்போதைய நிலையில் இருப்பது தான் தமிழ் மொழி. பார்ப்பான் தமிழ் பேசுவதால் தமிழனல்ல.அவன் ஆரியனே. தெலுங்கு போன்ற மொழிகளையும் மீட்டுருவாக்கம் செய்தால் தனித்தியங்க முடியும்.

No comments:

Post a Comment