Monday 28 August 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது.

 29

25



"தகைசால் தமிழர்" விருது மட்டுமல்ல, இதுவரை உலக அளவில் அவர் பெற்ற பெற்ற விருதுகள் எத்தனை, எத்தனையோ!

கி. வீரமணி பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது.

•  1993ஆம் ஆண்டு நாகை பெண்கள் மாநாடு 'இனமானப் பேரொளி' என்ற பட்டத்தினை வழங்கியது.

•  1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கிய. 'தந்தை பெரியார் சமூக நீதி விருது'.

•  2000ஆவது ஆண்டில் புதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் வழங்கிய, 'பாரத் ஜோதி' விருது.

• 2003ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் தமிழ்ச்சங்கம் வழங்கப்பட்ட ‘ஆக்ஸ்போர்டு தமிழ் விருது'.

•  2003ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம்.

•  2003ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் வழங்கிய, ‘பேரறிவாளர்' விருது.

•  2009ஆம் ஆண்டு மலேசிய திராவிடர் கழகம் வழங்கிய கருத்துக் கனல் விருது.

•  2009ஆம் ஆண்டு முரசொலி அறக்கட்டளை வழங்கிய, ‘கலைஞர் விருது'.

•  2010ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய, ‘பெரியார் ஒளி விருது'.

•  2010ஆம் ஆண்டு கோவை கே.ஜி. அறக்கட்டளை வழங்கிய, 'ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது'.

•  2011ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் பி.எஸ்.ஏ.சாமி அறக்கட்டளை வழங்கிய ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது'.

•  2012ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி வழங்கிய “வாழ்நாள் சாதனையாளர் விருது''. 

2019ஆம் ஆண்டு "அமெரிக்க மனித நேய சங்கம்" வழங்கிய "மனித நேய வாழ்நாள் சாதனையாளர்' விருது.

•  2019ஆம் ஆண்டு காஞ்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய, ‘தந்தை பெரியார் விருது'.

•  2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயங்கும் மகாராஷ்டிரா ஃபவுண்டேஷன் சார்பில் "நரேந்திர தபோல்கர் விருது".

•  2022ஆம் ஆண்டு உலக திராவிட மகளிர் மாநாட்டில் "பகுத்தறிவுப் போராளி" என்ற பட்டம்.

•  2022ஆம் ஆண்டு கனடா டொராண்டோவில் வழங்கப்பட்ட 'வாழ்நாள் சாதனையாளர் விருது'. 

2023ஆம் ஆண்டு காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட, ‘பொதுவாழ்வில் நேர்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.

இந்த வரிசையில் 25.06.2023 அன்று டெல்லியில் சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைப் போராட்டக் கல்வி தொடர்பான தொடர் பணிக்கான ’வாழ்நாள் சாதனையாளர்  விருது-2023’ தலைநகர் டில்லி பிரகதி திடலில் உள்ள ‘சி.ஜி. ஸ்மார்ட் ஹாபிடேட் பவுண்டேசன்’ அமைப்பு மற்றும் 'டி ஆர்க்  பில்டு அமைப்பு' வழங்கியது.

''...க்குத் தெரியுமா கற்பூர வாசனை? - கவிஞர் கலி. பூங்குன்றன்'' என்கின்ற கட்டுரையின் ஒரு பகுதி ( )


No comments:

Post a Comment