Friday 17 December 2021

துறவியாக சூத்திரனுக்கு அனுமதி இல்லை

சூத்திரன் என்ற இழிசொல்லை நம்மைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியவர்கள்,  இன்றும் பயன் படுத்துகின்றவர்கள்,  பிராமணர்கள். அவர்கள் தம்மை பிராமணர் என்று சொல்லிக்கொள்ளும்போதே நம்மை இழிபிறவியினர் Kul-heena; low-borns)  சூத்திரர்கள் என்று கருதுகிறார்கள் மற்றும் சுட்டிக்காட்டுகிறார்கள் என்பது  தெளிவாகும்.  
கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோதே இந்தக் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  நம்மை மீண்டும் அநாகரிக வேத காலத்திற்குக் கொண்டுசெல்ல ஜக்கி மூலமாக சதுர்வர்ண சதிகாரர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும். (அ)தர்ம சாஸ்திரங்களைக் காட்டி சூத்திரர்கள் துறவு புகுவது தடுக்கப்படும், (தற்போது நீதி மன்றங்கள் அந்த உரிமையை அங்கீகரித்திருந்தாலும் கூட). 
சென்னை உயர்நீதிமன்றத்தின், 1887 ஆம் ஆண்டுத் தீர்ப்பு ஒன்றில், சூத்திரர்களில் துறவிகள் இருந்தால், அவர்கள் பரதேசிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கம் அளித்தவர் நீதிபதி முத்துசாமி ஐயர் ஆவார். (He said that  "If an ascetic or a hermit is a Brahmin, he is called a Yati or Sanyasi; if a Sudra, he is called a paradesi" (Giyana Sambandha Pandara Sannadhi v. Kandasami Tambiran - 1887) (Chief Justice. Sir Arthur J. H. Collins and Justice Muthusamy Ayyar) (P - 385 Madras Series Vol .X). )
இந்து மதம் பிராமணரல்லாதாரை அமைப்பு ரீதியாகத் தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறது. 
இந்தச் சூத்திர மடாதிபதிகள் (பரதேசிகள்) என்றைக்குத தன்மானம் கொண்டவர்களாக மாறுவர்?
- கட்செவி வழியாக பெறப்பட்டது

No comments:

Post a Comment