Sunday 4 September 2016

GATE - 2017 தேர்வு பற்றிய சில முதன்மைக் குறிப்புகள்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (அய்அய்டி), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (அய்அய்எஸ்சி) உள்பட நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் பொறியியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கேட்(Graduate Aptitude Test in Engineering - GATE). சில கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வின் அடிப்படையில் பிஎச்டி படிப்புக்கும் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் அய்அய்எஸ்சி, ஏழு அய்அய்டிக்கள் இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன. வரும் ஆண்டு கேட் தேர்வை நடத்தும் பொறுப்பை ரூர்க்கி அய்அய்டி ஏற்றுக் கொண்டுள்ளது. கேட் தேர்வை எழுதி தகுதிபெறும் மாணவர்கள் முதுநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் வழங்கும் உதவித்தொகையைப் பெற முடியும்.


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பஷேன், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கமிஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல்வேறு பொதுத்-துறை நிறுவனங்களும் இத்தேர்வின் அடிப்படை-யில் தகுதியுடையவர்களை வேலைக்குத் தேர்வு செய்கின்றன. சில கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கின்றன. நேர்முகத் தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும் நிலை இருந்தால், கேட் தேர்வுகளுக்கு 70 சதவீத மதிப்பெண்களும் நேர்காணலுக்கு அல்லது படிப்பு மதிப்பெண்-களுக்கு 30 சதவீத மதிப்பெண்களும் ஒதுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்-பட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் கல்வி உதவித் தொகை குறித்த விவரங்களை மாணவர்கள் சேர விரும்பும் கல்வி நிறுவனங்களில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கேபினெட் செக்ரட்டேரியேட்டில் சீனியர் ஃபீல்ட் ஆபீசர் (எஸ்.எஃப்ஓ டெலி), சீனியர் ரிசர்ச் ஆபீசர் (எஸ்.ஆர்ஓ) _ கிரிப்டோ, எஸ்ஆர்ஓ (எஸ் அண்ட் டி) போன்ற குருப் ஏ பிரிவு பணிகளுக்கு கேட் தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பொறியியல் படிக்கும் மாணவர்கள் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே இந்தத் தேர்வுக்கான ஆயத்த வேலைகளை தொடங்கிட வேண்டும். தேர்வுப் பாடத்-திட்டத்தைப் பார்த்து, அதில் நன்கு பயிற்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க தனியார் பயிற்சி (கோச்சிங்) மய்யங்கள் உள்ளன. அதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித் தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்கலாம்.

பிளஸ்டூ முடித்துவிட்டு அய்.அய்.டி.யில் சேர்ந்து படிக்க நினைத்து அதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கேட் தேர்வு மற்றொரு வாய்ப்பு. இத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அய்.அய்.டி. மட்டுமல்ல அய்.அய்.எஸ்சி, என்.அய்.டி., அய்.அய்.அய்.டி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேரலாம். அத்துடன் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும். கேட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்-கழகத்தில்கூட தனி இடங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலை-வாய்ப்பைப் பெற இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

கேட் நுழைவுத் தேர்வை யார் எழுதலாம்?

என்ஜினீயரிங், டெக்னாலஜி, ஆர்க்கி-டெக்ச்சர், பார்மஸி ஆகிய பாடப் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர்களும், அந்தப் பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த அய்ந்து ஆண்டு அல்லது டியூயல் டிகிரி படிப்பை முடித்த மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். பி.எஸ்.சி (ரிசர்ச்), பி.எஸ். போன்ற நான்கு ஆண்டு படிப்புகளைப் படித்த மாணவர்களும் அந்தப் பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

பொறியியல், தொழில்நுட்ப இளநிலைப் பட்டப்படிப்புக்கு நிகரான ஏ.எம்அய்.இ., ஏ.எம்.அய்.சி.இ. போன்ற படிப்புகளைப் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., படிப்புக்குப் பிறகு ஒருங்கிணைந்த பொறியியல் அல்லது தொழில்நுட்ப நான்கு ஆண்டு முதுநிலைப் படிப்புகளைப் படித்த மாணவர்-களும் விண்ணப்பிக்கலாம். கேட் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான தகுதி விவரங்களை கேட் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து-கொள்ளலாம்.

வரும் ஆண்டு கேட் தேர்வில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

எக்ஸ்.இ. (என்ஜினீயரிங் சயின்ஸ்) பிரிவில் அட்மாஸ்பெரிக் அண்ட் ஓசியோனிக் சயின்சஸ் பாடப்பிரிவு புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்வதற்கு விரல் ரேகையைப் பதிவு செய்யவேண்டும். பட்டம் பெற்றவர்கள் பட்டப்படிப்பை முடித்தற்கான சான்றிதழ், இறுதி ஆண்டு செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து விண்ணப்பத்துடன் அப்லோடு செய்ய வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு (அய்ந்தாவது, ஆறாவது செமஸ்டர்கள்) மதிப்பெண் சான்றிதழை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். இதேபோலதான், மற்ற படிப்புகளுக்கும்.

இந்தத் தேர்வு முறை எப்படி இருக்கும்?

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் காலையிலும் மாலையிலும் இத்தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கேட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் எழுதலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்செங்கோடு, திருவண்ணா-மலை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் எழுதலாம்.

இத்தேர்வு எழுதுவதற்கான அனுமதிக் கடிதம் (அட்மிட் கார்டு) தபால் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்பட மாட்டாது. இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு வரும் மாணவர்கள் பாஸ்போர்ட், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையுடன் தேர்வுக்கு வரவேண்டும்.

23 பாடப் பிரிவுகளில் ஆன்லைன் மூலம் இத்தேர்வு நடத்தப்படும். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அக்ரிகல்ச்சுரல் என்ஜினீயரிங், ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் பிளானிங், பயோ டெக்னாலஜி, சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், ஈக்காலஜி அண்ட் எவல்யூஷன், ஜியாலஜி அண்ட் ஜியோ பிசிக்ஸ், இன்ஸ்ட்ரு-மெண்டேஷன் என்ஜினீயரிங், கணிதம், மெக்கானிக்கல், மைனிங், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங், பெட்ரோலியம் என்ஜினீயரிங், இயற்பியல், புரடக்ஷன் அண்ட் இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் அண்ட் ஃபைபர் சயின்ஸ், என்ஜினீயரிங் சயின்சஸ், லைப் சயின்சஸ் ஆகிய பாடப் பிரிவுகளில் இத்தேர்வு இருக்கும். ஒரு மாணவர், ஏதாவது ஒரு பாடப்பிரிவில் மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப்-படுவார்கள். அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். வெர்ச்சுவல் ஸ்கிரீன் கால்குலேட்டரை பயன்படுத்த மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்துத் தாள்களிலும் ஜெனரல் ஆப்டிட்யூட் (லாங்க்வேஜ் அண்ட் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ்) குறித்த சில கேள்விகள் இருக்கும்.

எக்ஸ்இ தாளில் என்ஜினீயரிங் மேத்த-மேட்டிக்ஸ் பாடக் கேள்வித்தாளைக் கட்டாயமாக எழுத வேண்டும். புளூயிட் மெக்கானிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், சாலிட் மெக்கானிக்ஸ், தெர்மோ டைனமிக்ஸ், பாலிமர் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங், ஃபுட் டெக்னலாஜி ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து இரண்டு பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

எக்ஸ்எல் தேர்வுத் தாளில் வேதியியல் பாட கேள்வித்தாளைக் கட்டாயமாக எழுத வேண்டும். அத்துடன் ஜெனரல் ஆப்டிட்டியூட் கேள்விகளும் இருக்கும். பயோ கெமிஸ்ட்ரி, தாவரவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், புட் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளிலிருந்து இரண்டைத் தேர்வு செய்து அந்தப் பாட கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.

மூன்று மணி நேரம் நடைபெறும் கேட் தேர்வில் 65 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு மதிப்பெண்கள் 100. மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள், நியூமரிக்கல் ஆன்சர் கேள்விகள் என்ற இரு முறைகளில் கேள்விகள் கேட்கப்படும். மல்டிப்பிள் சாய்ஸ் கேள்வி-களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது சரியானது என்பதை டிக் செய்ய வேண்டும். நியூமரிக்கல் ஆன்சர் கேள்விகளுக்கான விடையாக வரும் எண்களை வெர்ச்சவல் கீ பேடு மூலம் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

கேட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உரிய சான்றிதழ்களையும், ஆவணங்களையும் இணைய தளத்தில் அப்லோடு செய்ய வேண்டும். புகைப்-படத்தையும் கையெழுத்தையும்கூட ஆன்லைன் மூலம் அப்லோடு செய்ய வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் ரூ.750. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750. மற்றவர்களுக்குக் கட்டணம் ரூ. 1,500. விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் அல்லது இ_செலான் மூலம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தையோ ஆவணங்களையோ தபால் மூலம் அனுப்பி-வைக்கக் கூடாது.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 4.10.2016.

விவரங்களுக்கு: www.gate.iitr.ernet.in
-உண்மை இதழ்,1-15.8.16

No comments:

Post a Comment