Sunday 4 September 2016

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஒரு அறக்கட்டளை நிறுவனமாக பதிவு

தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற பொழுது, அய்யா, அம்மா, மறைவிற்கு பிறகு நீண்டகாலமாக நடைபெற்று வந்த ‘வருமான வரி’ வழக்கு மேல்முறையீட்டுக் குழு உச்சநீதிமன்றத்தில் தந்தை பெரியார் சார்பாகவும், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாகவும், பிரபல வருமானவரிச் சட்ட வழக்குரைஞர் எம்.உத்தம்-ரெட்டி அவர்களும், ஆடிட்டர் சுரேந்தர் அவர்களும் வழக்காடினார்கள்.

அந்த வழக்கில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை ஒரு அறக்கட்டளை நிறுவனமாக, வருமான வரித்துறை இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதனை அன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தேன். அதனை ‘விடுதலை’ (28.8.1979) முதல் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம். அன்று முதல் இன்றுவரை வருமானவரி பிரச்சினையை மிகவும் விரிவான முறையில் பதிவு செய்து கொள்ளு-வது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு ‘வருமான வரிவிலக்கு’ பெற்ற வரலாறும், கழகத்திலிருந்து வெளியேற்றப்-பட்டவர்கள் செய்த துரோகமும் இங்கு பதிவு செய்கிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் 1920இல் பெரிய வியாபாரத்தை விட்டுவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்த வசதியாளரான அவர் எந்த வியாபாரத்திலும் ஈடுபட்டவர் அல்ல. எனவே, கணக்கில் காட்டாமல் மறைத்துவைக்க வேண்டிய வருமானம் (Undisclosed Income Sources)  என்று எதுவும் அவர்களை பொறுத்தவரை இருந்ததில்லை.

மாநாடுகளில் மிச்சப்படும் பணம் நன்கொடை, அன்பளிப்பு, பணம், தனது பங்குத் தொகை, தனது தந்தையார் அறக்கட்டளை-யாகிய “வெங்கட்டநாயக்கர் டிரஸ்ட்’’ சொத்துக்களில் அவரது பங்குமூலம் கிடைத்த தொகை எல்லாம் அவர் இயக்க சொத்தாக ஆக்கியவர், தனி வாழ்க்கை வேறு, இயக்க வாழ்க்கை வேறு என்ற தந்தை பெரியார் அவர்களுக்கு இரு வகையான வாழ்க்கை இல்லாத நிலையில், தனியே கணக்கு  என்பதெல்லாம் அவரைப் பொறுத்து காட்டத் தேவையே எழவில்லை.

அவரது தொண்டர்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை அசைக்க முடியாத நம்பிக்கை “அய்யாவுக்கு நாம் கொடுத்தோம். அதை அவர் எப்படிப் பயன்படுத்தினாலும் கொடுத்த பிறகு அது பற்றி சிந்திப்பதோ, கேள்வி கேட்பதோ நமது உரிமை அல்ல’’ என்ற தெளிவான எண்ணத்தில் உள்ள தோழர்களே அவர்களது தொண்டர்கள்.
போராட்டங்கள், இடையறாத சுற்றுப் பயணங்கள் _ இவைகளில் ஈடுபட்ட பெரியார் ஒரு வியாபார நிறுவனத்தைப்போல, தனியே கணக்காளர் எவரையும் வைத்து முறையான கணக்கு, தணிக்கை எதையும் வைத்துக்-கொள்ளும் நிலைக்கு ஆட்படாதவராகவே இருந்தார்.

தந்தை பெரியார் அவர்கள், அவருடைய சொந்த சொத்துக்கள், அவருக்கு அவற்றின் மூலம் கிடைத்த வருவாய், அசையா சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த தொகை, மக்கள் அவரது தொண்டினைப் போற்றி அய்யா அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டி அவருக்கு அன்பளிப்பாகவும், நன்கொடையாகவும் கொடுத்த சொத்துக்கள் இவைகளை ஒரு அறக்கட்டளையாக்கி, தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைப் பிரச்சாரப் பெரும்பணிக்குப் பயன்படுவதற்காக, ஒரு நிறுவனமாகவே சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் 1952இல் பதிவு செய்தார்கள்.

இந்த அமைப்பினை அவர்கள் 1935-லேயே தோற்றுவித்து விட்டார். எனினும், சட்டபூர்வமாக பதிவு செய்தது 1952இல்தான்.

அதற்குக் காரணம் என்னவென்றால், அதில் அவர்களோடு நிர்வாகக் குழு உறுப்பினர்-களாகப் போடுவதற்கு அய்யாவின் முழு நம்பிக்கைக்கு உரியவர்களை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பல ஆண்டுகாலம் அவர்கள் தேடிக் கொண்டே இருந்ததுதான்
அய்யாவின் அடிச்சுவட்டில்.... 159  - கி.வீரமணி
-உண்மை இதழ்,1-15.8.16

No comments:

Post a Comment