Sunday 29 May 2016

கி.மு. 500இல் தொடங்கி கி.பி. 500 வரை பரவி வந்த ஜாதிமுறை


வேதங்களும், ஸ்மிருதிகளுமே இந்தப் பிளவுகளுக்குக் காரணம்

தேசிய மரபணு ஆய்வு
மய்யத்தின் தலைவர் பேட்டி


கோல்கத்தா பிப் 8-_ சமூகத்தில் மக்களை வர்ணாசிரம முறையில் கூறு போட்டவை வேதங்க ளும், ஸ்மிருதிகளுமேதான் என்று மரபணு ஆய்வு மய்யத்தின் தலைவர் முஜும்தார் செய்தியாளர் களிடம் கூறினார்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்பவர் களின் மரபணுவைப் பரிசோதனை செய்த  உயிரியல் ஆய்வு மய்யம்  இந்திய தீபகற்பத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்த மக்கள் 70 தலைமுறைகளுக்கு முன்பு அதாவது சுமார் 5 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு கடுமையாக்கப்பட்ட வர்ணாசிரம அமைப்பி னால் ஏற்பட்ட ஜாதிரீதியிலான சமூகப்பிளவால் திருமண பந்தங்கள் சுருங் கின. என்று மரபணு ஆய்வுகள் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது.
376 பேர் தேர்வு
கோல்கத்தாவைச் சேர்ந்த தேசிய மரபணு பகுப்பாய்வு மய்யம் இந் தியா முழுவதிலும் 20 பகுதிகளில் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்த 376 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் மரபணுக் களை பரிசோதனை செய்தது, இச்சோதனையின் முடிவு கோல்கத்தாவில் மரபணு ஆய்வு நிறுவனம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“இந்தியாவில் தற்போ தைய மக்கள் இனத்தில் 5 வேறுபட்ட பிரிவுகள் காணப்படுகின்றன. ஒன்று தென் இந்தியாவில் வசிக்கும் (திராவிட) இனம்  மத்திய ஆசியப் பகுதியிலிருந்து வந்த இனம் (ஆரியர்கள்), ஆஸ்ட்ரோ-ஆசிய இனம் (வங்காளிகள் மற்றும் பீகாரிகள்), மங்கோலியப் பகுதியில் இருந்து வந்த இனம்(வடகிழக்கு பகுதி வாழ் மக்கள்) அந்தமான்-நிகோபர் பகுதி மக்கள் என அய்ந்து பெரிய பிரிவுகள் தற்போது காணப்படுகின்றன. 
சுமார் 1500 ஆண்டு களுக்குப் முன்பு தென் இந்திய இனம் மற்றும் ஆஸ்டிரோ-ஆசிய இனங் களிடையே திருமண உறவுகள் இருந்தன, இவர்களுடைய குழந்தை களின் மரபணுக்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக காணப் பட்டன,  ஆனால் 1500 ஆண்டுகளுக்குப் பிறகு வர்ணாசிரம முறைகள் கடுமையாக மக்களிடையே புகுத்தப்பட்டன.
பிளவுபட்டனர் மக்கள்
இதன் விளைவாக சமூகம் பலஜாதிகளாக பிளவுபட்டது, ஜாதியை விட்டு வெளியே நடக் கும் திருமண உறவை வர்ணா சிரம கொள்கைகள் தடை செய்தன. இத னால் திருமணங்கள் ஜாதி களுக்குள்ளே நடை பெற்றன. இதன்விளைவு இந்திய தீபகற்பத்தில் நூற்றாண்டுகளாக ஒற்று மையுடன் வாழ்ந்து வந்த மக்களிடையே பிளவு தொடங்கியது என்று அந்த ஆய்வுகள் கூறு கின்றன.

பத்திரிகை யாளர்களிடம் பேசிய ஆய்வுக் குழுவின் தலைவர் பார்த்தா மூஜும்தார் கூறிதாவது: இந்தியா முழுவதிலும் 20 பகுதிகளை தேர்வு செய்து அங்கு வாழ்ந்த 376 -பேரின் மரபணுக்கள் பரிசோதனைக்கு எடுத் துக் கொண்டோம். இம் முடிவுடன் மத்திய ஆசியா, கிழக்காசியா, சீனம் மற்றும் இந்தியப் பெருங்கடல் நாடுகளிடையே வாழும் மக்களின் மரபணு முடிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். இதன் மூலம் இந்தியாவிற்குள் பல்வேறு காலகட்டத்தில் மனிதர்களின் வருகை பற்றி தெளிவான ஒரு வடிவம் கிடைத்தது. அதே நேரத்தில் இந்தியச் சமூகவாழ்வியல் முறையை வரலாற்றுப் பதிவுகள் மூலம் எங்கள் முடிவையும் ஒப்பிட்டுப் பார்த்தோம் இதனடிப்படையில் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டில் திடீ ரென இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்த மக்களுக்கிடையான திரு மண உறவு நின்றுவிட்டன.
ஜாதிகளுக்குள் திருமண உறவு கட்டாயம்
வரலாற்றுச் சான்றாவ ணங்களின் படி இந்த கால கட்டத்தில் தான் வர்ணாசிரம முறை கடுமையாக பின்பற்றப் பட்டன. இதன் மூலம் பல்வேறு ஜாதிப் பிரிவுகள் தோன்றின. ஜாதிகளுக்குள்ளான திருமணஉறவு கட்டாய மாக்கப்பட்டன. இதற்குக் காரணமாக வேத நூல்கள் மற்றும் ஸ்மிருதிகள் சான்றாக காட்டப்பட்டன.
வர்ணாசிரம முறைகள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தோன்றிவிட்டன. ஆனால் அந்த வர்ணாசிரம முறைகள் மிகவும் சிறிய குழுக்களிடையே இருந்து வந்தன. முக்கியமாக வட இந்தியாவில் இருந்து இந்தியா முழுவதும் பரவிய அந்தக்குழுக்கள் மூலம் வர்ணாசிரம ஜாதி முறை மெல்ல மெல்ல இந்தியாமுழுவதும் பரவி யது, அதாவது கிமு 1500-களிலிருந்து தொடங்கி கிபி 1500 வரை இந்தியாவில் வாழ்ந்த மக்களிடையே இந்த ஜாதிப்ப்பிரிவு முறைகள் பரவ தொடங்கி. அதன் பின் கடுமையாக இறுகின.
வரலாற்றுப் பதிவுகள் மற்றும் மரபணு ஆய்வுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது; மேலும் பல நூற்றாண்டுகளாக தாய்வழிச்சமூகமாக இருந்த போது சமூக இணைப்பு ஏற்பட்டு எந்த ஒரு சமூகப் பிளவும் இன்றி திருமணம் மற்றும் குழந்தைபெறுதல் போன்றவை இந்தியா முழுவதும் பொதுவாக இருந்தது, அதன் பிறகு தந்தைவழிச் சமூகம் மற்றும் குலம் வம்சம் போன்ற விதிகள் தோன்றி கடுமையாக்கப்பட்டது, என்று கூறினார்
(‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 6.2.2016)
இந்தியா முழுவதும் பரவி இருந்த (திராவிட இனம்) சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முன்பாகவே சிறந்துவிளங்கிய நாகரிகம் கொண்ட மக்கள் இருந்ததாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சான்றாக தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூர், ஆந்திராவில் உள்ள கடப்பா, மகராஷ்டிராவில் உள்ள நாக்பூர், குஜராத்தில் உள்ள தோளவீரா, மற்றும் பிகாரில் உள்ள கயா போன்ற இடங்களில் நடந்த அகழ்வாய்வில் இந்தியா முழுவதும் ஒன்றுபட்ட கலாச்சார மக்கள் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. மத்திய ஆசியாவில் இருந்து வந்த இனக் குழுக்களின் ஆதிக் கம் மெல்ல மெல்ல இந்தியா முழுவதும் பரவி மக்களை தென் இந்தியாவில் மட்டும் வாழும் இனமாக சுருக்கியது.
பவுத்தர்கள், சமணர்கள் படுகொலை
முக்கியமாக தென் இந்தியாவில் சமணமும், பவுத்தமும் மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு இருக்கும் போது வட இந்தியாவில் வேதமதம், சனாதனம் மற்றும் தென் இந்தியாவில் சைவம் வைணவம் போன்ற மதங்கள் உருவாகின. இந்த மதங்கள் வர்ணாசிரமக் கொள்கைகளை தங் களுக்கு எடுத்துக்கொண்டு அதன் படி இம்மதத்தை ஏற்ற மக்களும் வாழ வற்புறுத்தப்பட்டது. இதை எதிர்த்தமக்களும் அவர்களின் தலை வர்களும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

முக்கியமாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விஜயநகரம், சதாரா போன்ற இடங்களில் வாழ்ந்த சமண பவுத்த துறவிகள் கழுவேற்றுவதன் மூலமும், தீயிலிட்டு கொழுத்தியதன் மூலமும், எண்ணெய்செக்குகள் மற்றும் கரும்பு பிழியும் உபகரணங்களின் மூலம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இம்மதங் களைப் பின்பற்றுபவர்களை பய முறுத்துவதற்காகவே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். மதுரையில் மட் டும் எண்ணாயிரம் சமணர்கள். கழுகு மலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமணத்துறவிகள் கழுவி லேற்றப்பட்டனர். சதாரா (மகா ராஷ்டிரா)வில் சுமார் 12 ஆயிரம் பவுத்த துறவிகள் தீயிலிட்டுக் கொளுத் தப்பட்டனர். இதை சிலைகளாகவும் ஓவியங்களாகவும் செதுக்கியும் தீட்டியும் வைத்துள்ளனர்.
-விடுதலை,9.2.16

No comments:

Post a Comment