Tuesday 23 March 2021

பார்ப்பனர்களை கண்டிக்கும் காந்தி

“பிராமணர்களே, சரணடையுங்கள்!” காந்தியார் கூறுகிறார்!

பிராமணர்-பிராமணரல்லாதார் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிராமணர்கள் சரணாகதி அடைந்துவிட வேண்டும்இதுதான் அவர்களுடைய கடமைபிராமணரல்லாதார் எத்தனை இடங்கள் கேட் கிறார்களோ அத்தனை இடங்களையும் அளித்துவிட வேண்டும்என்னுடைய அதி காரத்தில் அது இருந்தால்அதற்கு மேலும் சில இடங்களை அளிப்பேன்பிராமணர்கள் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையால் தான் பிராம ணரல்லாதார் இவ்வாறு இடங்கள் கேட் கிறார்கள்பிராமணர்கள் நீண்ட காலமாகவே மிகச் சிறந்த தொண்டாற்றியிருக்கிறார்கள்ஆனாலும் தங்களை உயர்வாகக் கருதும் தற்பெருமையின் காரணமாக தங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையே அவர்கள் கற்பிக் கும் வேறுபாடு கொடூரமானது.

நாம் எந்த வேறுபாட்டை-அதாவது அய் ரோப்பியர்கள் தங்களுக்கும் கறுப்பர்களுக்கு மிடையே பாராட்டும் வேறுபாட்டை எதிர்த்துப் போராடுகிறோமோ அந்த வேறு பாட்டின் அள விற்கு இதுவும் கொடூரமானது.’’

(“இந்து: 28.8.1920)

பிராமணர்களே தேசத்தை

நாசமாக்கும் பாவிகள் - காந்தியார் சாடல்

மாயவரத்தில் பிராமணர்கள் பஞ்சம சகோதரர்களிடம் சமமாகப் பழகினால் மற்ற வகுப்பினர் அவர்களைப் பின்பற்ற மாட்டேன் என்று சொல்லுவார்களாதங்களுடைய தற்கால நிலைமை பூர்வீகத் தவபலத்தால் தலை முறைத் தத்துவமாய் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால் அவர்களே தேசத்தை நாசமாக்கும் பாவிகளாவார்கள்.’’

ஆதாரம்: “தமிழ்நாட்டில் காந்தி’’

பக்கம் 170, 295, 296

No comments:

Post a Comment