Monday 21 December 2020

ஆம், ஓசி சோறுதான், அது பாசச் சோறு!


‘ஓசி சோறு' என்று என்னை கிண்டல் செய்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பொதுநலத் தொண்டன். எங்கள் இயக்கக் குடும்பம் தமிழ்நாடெங்கும் பரவி இருக்கிறது. கழகத் தோழர்களின் இல்லங்களில் நாங்கள் சாப்பிடுவது எங்களுக்கான மகிழ்ச்சியே - கழகக் குடும்பத்தார்களுக்கும் மகிழ்ச்சியே!

நேரடியாக இயக்கத்தில் இல்லாவிட்டாலும், தந்தை பெரியார் கொள்கைகளை சுவாசிக்கக் கூடியவர்கள் கட்சி களைக் கடந்தும் இலட்சக்கணக்கில் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில்கூட இன உணர்வு கொள்கைக் காரணமாக தந்தை பெரியாரை மதிப்பவர்கள், போற்றுபவர்கள், சமூகநீதியாளர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் உண்டு.

காலையில், சிற்றுண்டி ஒரு கழகத் தோழரின் வீட்டில்; மதிய உணவு மற்றொரு கழகத் தோழரின் வீட்டில். இரவு உணவு இன்னொரு கழகத் தோழரின் வீட்டில் இருக்கும். ஆம், ஓசி சோறுதான் - அது பாச சோறே! (பலத்த கரவொலி). ‘யாசகம் புருஷ  லட்சணம்' என்னும் கும்பல் ஓசி சோறுபற்றியெல்லாம் பேசக்கூடாது.

அன்னை மணியம்மையார் நினைவு நாளான மார்ச் 16 ஆம் தேதி என்னுடைய சுற்றுப்பயணத்தைத் தொடங்க விருக்கிறேன்.

- திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர்,  12.12.2020

No comments:

Post a Comment