Tuesday 6 August 2019

நாய்களில் ஜாதி பிரித்துப் பார்க்கும்போது - மனிதர்களிலும் உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று ஏன் பார்க்கக்கூடாது?



வல்லம் சாஸ்திரா பல்கலைக் கழக பார்ப்பனப் பேராசிரியர் விஷம் கக்கும் ஜாதிவெறிப் பேச்சு


வல்லம், ஆக.3 நாய்களில் ஜாதி வித்தியாசம் பார்த்து வாங்குகிறோம்; ஆனால், மனிதர்களில் மட்டும் ஜாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது - அனைவரும் சமம் என்று சொல்லுவது எப்படி சரி என்று வல்லம் - திருமலைசமுத்திரத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன் என்பவர் விஷம் கக்கும் வகையில் கொச்சியில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் பேசியுள்ளார். இந்தப் பேச்சு சமுக வலை தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இதுகுறித்து கழக வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்டக் காவல்துறை கண் காணிப்பாளருக்குப் புகார் மனு கொடுத்துள்ளார்.

பார்ப்பனப் பேராசிரியரின் விஷம் கக்கும் பேச்சு

பிறப்பின் அடிப்படையில் என்று எதையுமே சொல்லக்கூடாது; மனிதர்கள் எல்லோரும் சமம் என்று ஒரு வார்த்தையை சொல்லிவிட்டுப் போகி றார்கள்.

மனிதனில் எல்லோரும் சமம்; அதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சொன்னால், அதை ஒப்புக் கொள்ள முடியாது என்கிறார்; அப்படி சொல்வதை சாஸ்திரம்  அங்கீகரிக்கவில்லை.

ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு Birth characteristics உண்டு என்பதை சாஸ்திரம், வேதம் சொல்கிறது.


இதை நான் வெளிப்படையாக சொன்னால், எல்லோரும் ஒத்துக்கொள்ளமாட்டேங்கறா.

நான் ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கோ.

எனக்குத் தெரியாது இது -

நான் கேள்விப்பட்ட விஷயத்தை வைத்து ஒரு விஷயம் சொல்றேன்.

நாம் உபயோகப்படுத்துகின்ற எல்லா பொருள் களிலும் ஒரு Birth characteristics என்பதை நாம் எதிர் பார்க்கிறோம். அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால், நாம் மனிதர்களில் மட்டும்தான் எல் லோரும் சமம், எல்லோரும் சமம் என்று வாயால் வெளியில் சொல்லிவிட்டுப் போகிறோம்.

நான் கேட்கிறேன், எல்லோரும் சமம், அவனுக்குப் பிறப்பொழுக்கம் என்பதே வேண்டியதில்லை. பிறப்பினால் எல் லோரும் சமம் என்று சொல்றவாகிட்ட நான் என்ன கேட் கிறேன் என்றால்,

நாய்களில் ஜாதி தரம் பார்ப்பதில்லையா?

வீட்டில் நாய் வளர்க்கிறோம், That is Pet Dog வளர்க் கிறோம். அது எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னால், எங்கள் வீட்டில் வளர்ப்பது இல்லை. இருந்தாலும் சொல்கிறேன், ஒரு பொமரேனியன் வகை நாயை வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற வகை நாயை ஏன் வளர்க்கவேண்டும்? அதுதான்  Pet Dog ஆக இருக்க முடியும். ஏன் நாயிலேயே இன்னொரு ஜாதி இருக்கிறது; அல்சேஷன்  ஒரு ஜாதி இருக்கிறது; அதை ஏன் வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கேட்டால், அது It is not a Pet Dog என்று சொல்கிறோம்.

So, Within the characteristics of Dogs, certain Dogs are called as Pet animals; certain Dogs are called Wild animals. Within the characteristics  அந்த நாய்களுக்குள்ளே இருக்கிறது என்று சொன்னால், நாம் மனிதனில் அப்படி வித்தியாசம் இல்லை என்று ஏன் சொல்லவேண்டும் என்று நான் கேட்கிறேன்.

இதுபோன்று நீங்கள் பார்த்துக்கொண்டே போக லாம்.

மனிதர்களிலேயும் கூட, எவன் உயர்ந்தவன்? எவன் தாழ்ந்தவன் என்பதற்கு Characteristics by Birth ஏற்பட்டுப் போகிறது; அதை நாம் மறுக்க முடியாது.

இன்னொன்று கேள்விப்பட்டேன்; அது உண்டா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.



பிராமணன் என்றால் யார் தெரியுமா?

திரிப்பூர சுத்த சுத்தி என்று வைத்திருக்கிறாள்.

பிராமணனாக இருந்தால், மூன்று பரம்பரையாவது முக்கியமாக, அந்த பிராமணன் பாரம்பரியத்திலே, அதாவது Father - Mother, Father - Mother, Father - Mother என்று மூன்று தலைமுறையாவது இருந் திருக்கணும். அப்பொழுதுதான் அவனுக்கு அந்த பிராமணன் Character உண்டு என்று சொல்றான் என்று சொல்லிட்டு, சாஸ்திரத்திலே சொல்லியிருக்குது.

இது ஆச்சரியம் இல்லை.

நான் கேள்விப்பட்டது என்னன்னா,

Dogs வாங்குறவா இருக்காள்லோ இல்லியோ, அவா அந்த Dog க்கு ஒரு Pedigree என்று ஒன்று கேட்கிறார்கள்.

Pedigree  என்றால் என்ன? What is Pedigree? You tell me. அது என்ன அது? கலப்பில் இல்லாமல் ஒரிஜினலா இருக்கிறதா என்பதுதானே Pedigree. அதைத்தான் பிராமினுக்கு நாங்கள் சொல்றோம். தப்பு என்ன அதில்?

‘குதிரைகளிலும் திரிப்பூர சுத்தி பார்க்கப்படுவதில்லையா?'

ஒண்ணுமில்லே, குதிரைகள் அதாவது Horse Race நடத்துறாளோ இல்லியோ, நான் கேள்விப்பட்டேன், எனக்கு சொன்னார் ஒருத்தர்.

Horse Race  லே குதிரைமேலே பணம் கட்டுகிறான் ஒருத்தன். பணம் கட்டுறவன் என்ன பண்றான் என்றால், அந்த Horse னுடைய Breed   என்ன? என்று செக் பண்ணி, அந்த Breed  எங்கே இருந்து வந்தது என்று பார்த்து, அதற்கு திரிப்பூர சுத்த சுத்தி பாக்கிறான். திரிப்பூர சுத்த சுத்தி என்றால் என்ன அர்த்தம்?

whether it is a Original Horse of three generations from the same breed  என்று பார்க்கிறான். அப்போ, In all other things you consider the breed as very very important even if you take for example எங்கள் தமிழ்நாட்டில்,  Rice அரிசிதான் ரொம்ப முக்கியமானது என்றால், அந்த அரிசிக்குக் குறிப்பிட்ட Breed   அது நெல்லூர் அரிசியா? அது சம்பாவா? என்று அந்த Breed முக்கியமாகப் பார்க்கிறோம். ஒரு பழம் வாங்குவது என்றாலும், அதற்கு Breed   முக்கியமாகப் பார்க்கிறோம்.

முக்கியமா இன்னொன்று சொல்றேன். யாரும் இந்தக் காலத்துல தப்பா சொல்லக்கூடாது.

தமிழ்நாட்டுல, மற்ற இடங்களில் எல்லாம்கூட முக்கியமா ஒரு போராட்டம் நடக்கிறது.

அது என்ன போராட்டம் என்றால்,

Cross Breed விதைகள் எல்லாம் கொண்டுவரக் கூடாது. அப்படி கொண்டு வந்தால், நம்மூர் விவசாயமே அழிஞ்சு போய்விடும் அப்டின்னு  சொல்லிட்டு, எங்க ஊர்ல மரபணு மாற்றப்பட்ட விதை என்று சொல்றா.

மரபணு மாற்றப்பட்ட விதை என்று சொன்னால்,Cross Breed சிஸ்டத்தில் வந்த Seeds எதையுமே உபயோகப்படுத்தக் கூடாது என்று சொல்றா.

நான் அதையேதான் Community Human னுக்கும் சொல்றேன்.  Cross Breed சிஸ்டத்திலே வந்தால் என்னாகும் என்று கேட்டேன்.

நீங்கள் உபயோகப்படுத்துகிற பழத்திலே Cross Breed   இருக்கக்கூடாது; அரிசி, தானியங்களில் Cross Breed இருக்கக்கூடாது; நீங்கள் வைத்துக் கொண்டிருக்கின்ற மிருகங்களில் Cross Breed இருக்கக்கூடாது. எதிலுமே Cross Breed இருக்கக்கூடாது. ஆனால், உங்கள்ல மட்டும் Cross Breed  இருக்கவேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீங்க?

அது தப்பில்லியோ!

இவ்வாறு  எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன் என்பவர் பேசியுள்ளார்.

இந்த பார்ப்பனர் மாநாட்டில் தான்  உயர்நீதிமன்ற  இரு நீதிபதிகள்  பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பனப் பேராசிரியர்மீது புகார்

திருச்சி வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் என்பவர், பார்ப்பனப் பேராசிரியரின் சட்ட விரோத பேச்சு குறித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கரூர் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 3.8.19

https://youtu.be/7JDADApj9BU

No comments:

Post a Comment