Thursday 28 February 2019

மீனாட்சி தீட்டான கதையைக் கேளுங்கோ, கேளுங்கோ!

மீனாட்சி கோவிலில் நாடாரும் பஞ்ச மரும் நுழைந்ததால் மீனாட்சி தீட்டா யிட்டா கோத்திரமும் தீட்டாயிட்டு தாம் கேளுங்கோ, கேளுங்கோ!


சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததை யடுத்து கோயில் மூடப்பட்டு, சுத்தீகரணச் சடங்குகள் செய்யப்பட்டன. 80 ஆண்டு களுக்கு முன்பாக தமிழகத்தில் ஆலயப் பிரவேசம் நடந்தவுடன் இதேபோல சுத்தீகரணச் சடங்கு செய்யப்பட்டது.

1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி சனிக்கிழமையன்று தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தின் செயலர் எல்.என். கோபாலசாமியும் பட்டியல் இனத்தவர்களை(நாடார் உட்பட)யும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

வரலாற்றில் ஆலயப் பிரவேச நிகழ்வு என்று குறிக்கப்படும் இந்த நிகழ்வில், பி. கக்கன், உசிலம்பட்டி வி. முத்து, மேலூர் பி.ஆர். பூவலிங்கம், வி.எஸ். சின்னய்யா, முருகானந்தம் ஆகிய அய்ந்து தாழ்த்தப் பட்டவர்களும் எஸ்.எஸ். சண்முகம் நாடாரும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தனர்.

அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் உள்ள நாட்டார் வழக்காற்று மன்றத்தின் நூலகத்தில் உள்ள அன்றைய கும்மிப்பாடல் சிறு நூல் ஒன்றில் கூறுவ தாவது:-

பஞ்சமரும், நாடாரும் கோவிலுக்குள் நுழைந்ததால், மீனாட்சி தீட்டாயிட்டா, மீனாட்சி தீட்டான மதுரை தீட்டாச்சி, மதுரை தீட்டானால் நாடு கோத்திரமும் தீட்டாச்சு, என்று கூறி  கோவிலில் உள்ள மூலவர் மீனாட்சி சிலையை எடுத்துக் கொண்டு இன்றைய மதுரை மய்ய தபால் நிலையம் எதிரே உள்ள ஒரு கோவிலில் சிலையை வைத்து வழிபட ஆரம்பித் தனர்.

அதை எடுக்கச்சென்ற நீதிமன்ற ஊழியர்களை நெருங்கவிடாமல் கோவி லிலில் இருந்த பார்ப்பனப் பெண்கள் கோவில் வாசலை சுற்றி நின்று கொண்டு கோவில் நுழைவிற்கு எதிராக முழக்க மிட்டனர்.

சுமார் 1 வாரத்திற்கு மேல் நடந்த இந்த இழுபறிக்குப் பிறகு மீனாட்சி சிலையை மீண்டும் மீனாட்சிக் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

இந்த ஒரு வாரகாலத்தில் பஞ்சமர்கள் கோவிலில் நுழைந்ததால் ஏற்பட்ட தீட்டிற்குப் பரிகாரம் செய்யப்பட்டது, சிலை யும் சில நாட்கள் புனித நீரில் முழுமையாக மூழ்கவைக்கப்பட்டு பிறகு வெளியே எடுக்கப்பட்டது.

அந்தக் கும்மிப்பாடல்

பஞ்சமனும் சாணானும் கோவி லுக்கு வந்ததாலே,

மீனாட்சி ஆயிட்ட தீட்டு

தீட்டு ஆயிட்ட மீனாட்சி.,

மீனாட்சி தீட்டானதால

கோத்திரமும் தீட்டாச்சி,

கோத்திரம் தீட்டனதால

நாடு நகரமும் திட்டாச்சி,

கச்சேரிக்கு (நீதிமன்றம்) தெரியுமா சாத்திரம்?

கெட்டுப்போச்சு நம்ம கோத்திரம்

மீனாட்சி ஆயிட்டா தீட்டு

நாட்டார் வழக்காற்று மன்ற நூலகத்தில் உள்ள கோவில் நுழைவு கும்மிப்பாடல் தொகுப்பு.

-  விடுதலை ஞாயிறு மலர், 9.2.19

No comments:

Post a Comment