Sunday 28 November 2021

இந்தியாவில் சத்ரியர்கள் என்றுயாரும் இல்லை; சூத்திரர்களுக்கு சொத்தும் இல்லை!

#இந்தியாவில் சத்ரியர்கள் என்றுயாரும் இல்லை என்று பார்ப்பனர் தொடுத்த வழக்கு எண் 1.

பார்பனர்கள் வாதம்,இந்துக்களில்
பிராமணர்,
சத்ரியர்கள்
இருவரைத்தவிர
யாருக்கும் சொத்துக்களை வாங்கவே விற்கவோ உரிமையில்லை.

மனுதர்மபடி பிராமணர் மற்றும் சத்ரியர்கள் மட்டுமே சொத்துக்களை வைத்துக் கொள்ள உரிமை உண்டு.

புராணகாலத்தில்
#பரசுராமர் தன்தந்தையை ஒரு சத்ரியன் கொன்ற கோபத்தில் இந்தியாவில் எல்லா சத்ரியர்களையும் கொன்று விட்டார்.
எனவே இந்தியாவில் இப்போது மீதம் இருப்பவர்கள் அனைவரும் 
பார்பனர்,
வைசியர்,
சூத்திரர்,
பஞ்சமர்
என்ற பிரிவுகளில் மட்டுமே வருவார்கள்.
மனுதர்மம் படி இவர்களில் பார்பனரைத் தவிர வேறு யாருக்கும்
சொத்து வைத்துக் கொள்ள உரிமையில்லை!

எனவே பார்பனரைத் தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து‌ கொள்ள உரிமையில்லை என்று சட்டமியற்ற கோரி கிழக்கிந்திய கம்பெனி அரசுக்கு 1837ல் பார்ப்பார் மனு கொடுத்தனர்.

நல்லவேளை கிழக்கிந்திய கம்பெனியின் ப்ரைவி கவுன்சில் இப்படி ஒரே அடியாக உங்கள் புராணகதைகளை ஏற்றுக்கொண்டு வேறு யாருக்குமே சொத்து வைத்துக் கொள்ள உரிமையில்லை என்றெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது.
நிச்சயம் சத்ரியர்கள் இருப்பார்கள் என்று சொல்லி அந்த முதல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண்-2-
#ஆங்கிலேயரின்சட்ட ஆவண எண்
(I.L.R.10 I.L.R.12) 1886:

இந்த வழக்கு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.

இதற்கு நடுவே நடந்த 
#சிப்பாய்கலகம் பற்றியெல்லாம்,பார்ப்பானனுக்கு கவலை இல்லை,
இந்தியாவில் சத்ரியர்கள் யாருமே இல்லை என்பதை நிருபணம் செய்ய மீண்டும் போராடுகின்றான்.

இந்த வழக்கு வழக்கம்போல பார்ப்பனருக்கும்,வங்காள மற்றும் பீஹாரின் காயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்ரியன் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் நடைபெறுகிறது.
இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள காயஸ்தா பிரிவினர் சத்ரியர் தான் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்ப்பனர் கொடுத்த வழக்கு எண்--3.
ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண்(1916)20Cal.W.N.901).

1916ல் மறுபடியும் பார்ப்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள காயஸ்தா பிரிவினர் சத்ரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்ட்டில் தீர்ப்பை பெறுகிறார்கள்.இந்த வழக்கு 1926ல்தான் முடிகிறது.

இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்ப்பனர் தொடுத்த வழக்கு எண்--4.
ஆங்கிலேய சட்ட ஆவண எண்.L.R(1928)52 Bom.497

மறுபடியும் சிவாஜி பரம்பரையை விடாமல் வம்புக்கிழுத்த பார்பனர் 1926-ல் 
#வெங்கோஜி
அல்லது
#எக்கோஜி
என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் தஞ்சை மன்னர்களாக இருக்கிறார்கள் அவர்கள் சத்ரியர்கள் அல்ல சூத்திரர்கள் என்று
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள்.

அந்த வழக்கின் 229பக்க தீர்ப்பில்,
மகாராஷ்டிரத்தில் உள்ள சிவாஜி வம்சம் என்று சொல்பவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்(long gap from 1600-1900).
1)முதல் ஐந்து குடும்பங்கள் 
2)இரண்டாவது 96குடும்பங்கள்
3) மற்றவர்கள்
என்று பிரிக்கலாம்.
இவர்களில் முதல் இரண்டு பிரிவினரும் சத்ரியர்கள், அதனால் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள்
சத்ரியர்களே என்று பிரிட்டிஷ் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது.

இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்ப்பனர் தொடுத்த வழக்கு எண்--5.

மதுரையை சேர்ந்த யாதவர்கள் 1927ல் நாங்களும் யாதவ் குலத்தில் பிறந்த கிருஷ்ணனின் வம்ஷம்,
நாங்களும் சத்ரியர்கள்தான் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க,
எதிர்த்து வாதாடிய பாராபனர்கள் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வைக்கின்றனர்.

இப்படியாக ஆங்கிலேயர் காலத்திலும் பார்ப்பார் நிறுவ முயன்றது என்னவென்றால்,இந்தியாவில் சத்ரியர்கள் என்று யாரும் இல்லை.

இந்து மனுதர்மப்படி பிராமணன் மட்டுமே சொத்து வைத்து
கொள்ளலாம்!
படிக்கலாம்!
பதவிகளில்
இருக்கலாம்!
இன்னும் பிற பிற லாம்!லாம்!!லாம்!!!
ஆகவே தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படும் எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்

பார்ப்பான் உங்களை நேரில் பார்க்கும் போது
"#ஆமா அய்யா நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆண்ட பரம்பரை"
என்று தான் சொல்லுவான்.
ஆனால்,
உங்களை சூத்திரன் ஆக்க சட்டப்படி எல்லா வேலையும் செய்வான்.

எல்லா சாதியிலும் உங்கள் சொந்தக்காரன்(என்னையும் சேர்த்துதான்)உங்களை ஆண்டபரம்பரையில் சேர்க்க பல டகால்டி வேலை செய்வான் அதையெல்லாம் காதில் போட்டு கொள்ளாதீர்கள்.

உண்மையில் உங்களுக்கு உங்கள் சாதி உங்கள் சமூகத்தின் மீது அன்பு இருந்தால்,
ஆண்ட பரம்பரை,
புராண கதை
சொல்லி பெருமை பேசுவதை விட்டு விட்டு,
உங்கள் சமூகத்தில்,
கல்வியில்,
அறிவில்
நாம் இப்போது என்ன செய்கிறோம் என்று சிந்தியுங்கள்.

குறைந்தபட்சம் உங்கள் சமூகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் படித்து முன்னேற உதவுங்கள்.
பணமாக முடியவில்லை என்றாலும் நேரத்தை கொடுங்கள்.
படிப்புக்காக வங்கியில் கடன் வாங்க உதவுங்கள்.

ஆண்ட பரம்பரை கதை பேசினால்,
பார்ப்பான் உண்டியல் மட்டுமே நிறையும்.
அவனை தூக்கி சுமக்கும் தூக்குத் துக்கியாகத்தான் நம்மை வைத்திருப்பான்.
அப்போதும் நீங்கள் ஆண்ட பரம்பரை இல்லை என்று அவன் எங்காவது கோர்ட்டில் கேஸ் போட்டு கொண்டுதான் இருப்பான்.

பதிவுக்கு உதவிய நூல்:-
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்
ஆசிரியர்:கிருஷ்ணவேல்.

No comments:

Post a Comment