Friday, 7 February 2025

காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்!

Vikatan
`` `காட்டுமிராண்டி மொழி தமிழ்’ என பெரியார் சொன்னது ஏன்?’’ - கலி.பூங்குன்றன்!
விஷ்ணுராஜ் சௌ
தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கானஅரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.
Published: 20th Oct, 2018 at 16:44 PM

வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு எப்போதும் வியப்பைத் தரக்கூடியவை, அவர்கள் செல்லும் பகுதிகளில் தென்படும் மொழிகளின் விதவிதமான எழுத்துகள்தான். பொதுவாக மொழிகளைப் பேசக் கேட்கும்போது, அவை முழுமையான அழகியலை உணர்த்துவதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட மொழிகளில் பேசும் வார்த்தைகளின் சத்தங்களை மட்டுமே கடத்துகின்றன. எழுத்துகளின் வாயிலாகத்தான் ஒரு மொழியை முழுமையாக நாம் அறிய முடியும். அந்த வகையில், தந்தை பெரியார், தமிழ் மொழியில் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று, அதற்கான அரசாணையை வெளியிட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகின்றன.

ஒரு மொழியானது மனித நாகரிகங்களின் வளர்ச்சியைப்போல, காலப்போக்குக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைத் தன்னுள் நிகழ்த்தி செவ்வியல் தன்மையை அடைந்து, மொழியியலின் அடுத்தகட்டத்தை அடைகிறது. இந்த வளர்ச்சிக்காக அவை எடுத்துக்கொள்ளும் காலத்துக்குள் பல மொழிகள் அழிந்தும், வேற்றுமொழிகளின் கலப்பால் சில மொழிகள் சிதைந்தும் போய்விடுகின்றன. இன்று பயன்பாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் எழுத்துகள் இல்லாமல் வெறும் பேச்சுவழக்கு மொழியாகவே இருப்பதற்குக் காரணம், அவை முழுமையான வளர்ச்சியைப் பெறாமல் போனதே ஆகும். நாம் பயன்படுத்தும் எழுத்துகளானது, தொடக்கத்தில் கோடுகளாக ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களாக மாற்றம் அடைந்து, பல தலைமுறையினர் அதைச் செதுக்கிவைத்து, இன்று நம் கைகளில் வந்து கிடைத்துள்ளன.

`குடியரசு’ இதழில், தந்தை பெரியார் 20.01.1935 அன்று, 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது 19.10.1978 அன்று, பெரியார் நூற்றாண்டில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரசாணையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்தினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமானது 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை (அவ், அய், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ) திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் 1935-லிருந்தே நடைமுறைப்படுத்தின. 1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 'எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவோம்' என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு இரண்டு (அய், அவ்) எழுத்துகளைத் தவிர்த்து மற்ற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களையும் அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். தமிழ் மொழியில் பெரியார் அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரால் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், 39 ஆண்டுகளை நிறைவு செய்து நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தச் சூழலில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றனிடம் பேசினோம்.

``தமிழ் மொழியின் எழுத்துச் சீர்திருத்தங்களை முதலில் பெரியார் கொண்டு வரக் காரணம் என்ன?"

``மொழியை எளிமையாக்குவதுதான். இந்த மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான அடிப்படைக் காரணம். எழுத்துகள் ஒவ்வொன்றும் வேறு அளவுகளைக் கொண்டிருந்தன. இது அச்சு பதிப்பித்தல் முறையைக் கடினமாக்கியது. எனவே, அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் அனைத்து எழுத்துகளும் ஒரே அளவுடையதாக மாறும். `ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளை மட்டும் வைத்துக்கொண்டு உலக மொழியாக மாறும்போது, எழுத்துகளை எளிமைப்படுத்துவதன் மூலம் தமிழ்மொழி நிறைய மக்களைச்  சென்றடையும்' என்றார் பெரியார். எனவே, முதலில் நம் குழந்தைகள் தாய்மொழியைப் படிக்கவும், புரிந்துகொள்ளவும் அது எளிமையாக்கப்பட வேண்டும்; அப்போதுதான் தமிழ்மொழி அடுத்த தலைமுறையைச் சென்றடையும் என்பதுதான் அதன் நோக்கம்."

``தமிழ் மொழியில் இதுபோன்று எழுத்து மாற்றங்கள் தொடர்ந்து நிகழுமா?’’

``ஆம்... தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எழுத்து வடிவம் இப்போது இல்லை. எனவே, நம் மொழி இன்னும் எளிமையாக்கப்படலாம். இவை அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். அந்த மாற்றங்கள் உலகம் தழுவியதாக மாறும். ஏற்கெனவே, மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றன.’’

```காட்டுமிராண்டி மொழி தமிழ்' எனப் பெரியார் சொன்னது குறித்து, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவர் அப்படிச் சொன்னதற்கான காரணங்கள் என்ன?"

``பெரியார், இந்தக் கருத்தை இரண்டு காரணங்களுக்காகச் சொன்னார். ஒன்று தமிழ் மொழி தோன்றிய காலஅளவை வைத்து; இரண்டாவது தமிழில் உள்ள புராணங்கள் சார்ந்த நூல்களைக் கருத்தில்கொண்டு. அதே பெரியார்தான், எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். தமிழ்ப் புத்தாண்டை மாற்றினார். திருக்குறள் மாநாடுகளை நடத்தினார். ஆக்கரீதியான சிந்தனையை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த விவாதத்தைப் பெரியார் கையிலெடுத்தார். ரஷ்ய மொழி போன்ற பல்வேறு மொழிகளில் நவீன இலக்கியங்கள் உலக அரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றாலும், அவை அனைத்தும் கடந்த 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவையே. செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற தமிழ்மொழி மட்டுமே 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரில் தொடங்கி, 20-ம் நூற்றாண்டில் பாரதிதாசன்வரை என தனக்கான உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் தமிழின் சிறப்பு."

காகிதங்களிலிருந்து, நவீன தகவல் தொழில்நுட்பக் காலத்துக்கு ஏற்ப, தமிழ் மொழி கணினியைச் சென்றடைந்த பின்னரும், நம் தாய்த்தமிழ்நாட்டுக் குழந்தைகளைச் சென்றடைவதில் ஏற்பட்டுள்ள இடைவெளிதான் அனைவருக்கும் கவலையைத் தருகிறது.

Saturday, 18 January 2025

அவதூறு பரப்பும் சீமான் மீது நடவடிக்கை கோரி புகார் மற்றும் விரிவான விளக்கம்


பார்ப்பன அடிவருடியாகவும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கைக்கூலியாகவும் ஆகிவிட்ட சீமான் சில காலமாக தந்தை பெரியாரைப் பற்றி அவதூராகவும் ஆபாச வார்த்தைகளாலும் பேசி வருகிறார். 

அண்மைக்காலமாக தந்தை பெரியார் சொல்லாத ஆபாசமான வார்த்தைகளை கூறி அதை தந்தை பெரியார் தான் சொன்னார் என்று பேசி வருகிறார். 

ஆதாரத்தை கேட்டால், ஆதாரமான நூல்களை மறைத்து வைத்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறுகிறார். 

"ஏதோ ஒரே ஒரு நூல்தான் இருக்கிறது அது திராவிடர் கழகத்திடம் பத்திரமாக உள்ளது"என்பது போல் கூறுகிறார். 

தந்தை பெரியாரை வேண்டுமென்றே சிறுமைப்படுத்துவதற்காக ஆர்.எஸ். எஸ்., பி.ஜே.பி பார்ப்பன கும்பல் பல காலமாக இது போன்ற செய்திகளை பரப்பிவருகிறது. 

அப்படிப்பட்ட எழுத்துக்களை படித்துவிட்டு வேண்டுமென்றே அதையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு அடாவடித்தனமாக பேசிவருகிறார். 

'செந்தில் மள்ளர்'என்பவன் தனது நூலில், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். காரர்களின் பதிவை ஆதாரமாக எடுத்துக் கொண்டு அதில் குறிப்பிட்டுள்ள ஆதாரமாக 'விடுதலை நாளேடு 11.05.1953' எனக் குறிப்பிட்டுள்ளான். 


அந்த நாளில்(11.05.1953)வெளிவந்த 'விடுதலை நாளேடு' நான்கு பக்கங்களைக் கொண்டதாகும்.

அந்த பக்கங்களில் எங்கேயும் இது போன்ற செய்தி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த நான்கு பக்கங்களை ஆதாரமாக இங்கே தருகிறோம்: 



- (11.05.1953, விடுதலை நாளேடு, நான்கு பக்கங்கள்)

இது குறித்து 'விடுதலை நாளேடு' அப்போதே பதில் கொடுத்துள்ளது. 

--------------++++++++++++++--------------

அவதூறுகளை அடியுரமாக்கி அகிலமெங்கும் கிளைத்தவர்!

தந்தை பெரியார மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்க வெண்டும் என்பதற்காகவே ஆரிய பார்ப்பார்கள் தொடர்ந்து அவதூறு பரப்பி வரு கின்றனர்.

அண்மையில் இணைய வெளியில் ஓர் அயோக்கியத்தனமான அவதூறு பரப்பினர்.

"ஒருவன் காம உணர்வு மிகும்போது தன் மகளை அல்லது தன் தாயையும் கூட புணர்ந்து இச்சையைக் தணித்துக் கொள்ளலாம்' என்று பெரியார் கூறியிருக்கிறார்."(ஆதாரம்: 11.05.1953-'விடுதலை)

என்று அப்பட்டமான ஒரு பொய்பை ஆதாரத்தோடு கூறுவதாய் பொய்யான ஆதாரத்தைக் கூறி மோசடியாக, அயோக்கியத்தனமாக இணையவெளியில் பரவவிட்டனர்.

உடனே பெரியார் தொண்டர்கள், 11. 05.1953 விடுதலையேட்டைத் தேடியேடுத்து இந்த அயோக்கியதனமாக அவதூறாகப் பரப்பிய அச்செய்தி 'விடுதலை' எட்டில் எத்தப் பக்கத்திலும் இல்லை யென்பதை எடுத்துக்காட்டி அவர்களின் மோசடிப் பிரச்சாரத்தைத் தகர்த்தனர்.

பெரியார் இருந்தபோதும் அவதூறு பரப்பியவர்கள், பெரியார் இறந்த பின்னும் அவரைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

அய்யா பெரியார் ஒரு அனல் நெருப்பு; அவதூறு குப்பைகள் எவ்வளவு போட்டாலும் அவை சாம்பல் ஆகும்!

அய்யாவின் புகழ் மேலும் மேலும் உயரும் என்பதை இது உறுதி செய்கிறது.

தந்தை பெரியார் ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும். நாணயத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடியவர். மளித நேயத்தின் மறுவடிவம்.

----------------------------++++++++++++--------------

இந்த புரட்டுச் செய்தி முகநூல் பதிவுகளில் வெளிவந்த போதே  முகநூல் உண்மை அறியும் குழு ஆய்வு செய்து இது பொய்யான செய்தி என்று அறுதியிட்டு கூறியுள்ளது. 

அதைப் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


மோசடியான குற்றச்சாட்டை பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

11.01.2025ஆம் நாள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உள்ள துணை ஆணையாளரிடம் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் உள்ள துணை ஆணையாளர் அவர்களிடம் புகார் அளித்த போது....(13.01.2025)

இதேபோல் பல அமைப்புகளும், கட்சிகளும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர்.

கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.